மக்கள் பணியில் தனித்து சிறந்து விளங்கும் மாமன்ற உறுப்பினர்

திருச்சி மாநகர் ஸ்ரீரங்கம் பகுதி 5வது வார்டு மேல கொண்டையம் பேட்டை வாய்க்கால் மேடு பகுதியில் நீத்தார் நினைவு மண்டபம் மற்றும் ஆற்றில் நீராடச் செல்பவர்கள் செல்லும் பாதை,5 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் முத்துக்குமார் அவர்களது மாமன்ற உறுப்பினர் பொது நிதியில் ( இரண்டு லட்சம் ரூபாய்) சீரமைக்கப்பட்டது. இவர் மதிமுக வை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர்களும் இவரைப்போலே பொதுமக்கள் பணி செய்தால் நிச்சயமாக மக்கள் மனதில் நீங்காத இடம் பெறுவார்கள் ஆனால் இந்த அப்பீஸ் முத்துக்குமாரை போல மக்கள் பணி செய்வதற்கு எந்த மாமன்ற உறுப்பினர்களுமே தயாராக இல்லையே கலெக்ஷனும் கமிஷனும் மட்டுமே இவர்கள் கண்களுக்கு தெரிகின்றது எப்பொழுது இவர்கள் மாறுவார்கள் அல்லது மாற்றுவோமா என்று வேதனையோடு புலம்புகிறார்கள் மற்ற வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

    திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா கணேசன் கல்லூரி தாளாளர் ராஜசேகரன் தற்போது திருச்சி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்-திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் அரசு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *