ஸ்ரீரங்கத்தில் மணல் கடத்தல் படுஜோர் கொள்ளையர்களுக்கு கடிவாளம் போடப்படுமா? அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர் பொதுமக்கள்.

திருச்சி, ஸ்ரீரங்கம், ஜன.21-

திருச்சியில் இன்று வரை காவிரி, கொள்ளிடம் ஆற்றில் எங்குமே மணல் குவாரி இயங்காத நிலையில் எந்தவித தடையும் இன்றி ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரையிலிருந்து எவ்வித தட்டுபாடு இன்றி மணல் கொள்ளையர்கள் கொஞ்சம் கூட அச்சமின்றி ஸ்ரீரங்கம் & மேலூர் பகுதிகளில் ஒவ்வொரு கட்டிடங்கள் முன்பும் குவியல் குவியலாக ஈரம் சொட்ட சொட்ட டிப்பர் லாரிகள், பிக்கப் வாகனங்களில் மூலம் மணல் வினியோகம் தாராளமாக நடந்து வருகிறது. இச்செய்தி எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தபோது என்பது தெரியவில்லை ஒருவேளை தாக்கத்தை ஏற்படுத்தினால் ஒவ்வொரு கட்டித்திற்கு முன்பு கொட்டப்படும் மணலை வெளியில் தெரியாமல் மறைக்க தற்போது பனி பொழிவு அதிகமாக இருப்பதால் திருட்டு மணலுக்கு குளிரும் என்பதால் வெளிவுலகத்திற்கு தெரியாமல் இருக்க முழுவதையும் தார்ப்பாய் போட்டு மூடப்படும் பணியும் அல்லது சாக்கு முட்டையில் நிரப்பி வைப்பதையும் காணமுடியும். மணல் கொள்ளையில் ஈடுபடுவர்கள் பாதுகாப்பதில், இதில் கட்சி பேதம் இன்றியும், எந்த இடத்தில் மணல் கொட்டப்படும் கட்டிடங்கள் வரை மணல் வாகனம் பாதுகாப்பாக செல்கிறதா என்பதை உறுதிபடுத்த ஒவ்வொரு முச்சந்தியிலும் ஆட்களின் நியமித்து யார் வருகிறார்கள் என்பதை கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அனைவரும் போனில் கான்பிரன்ஸ் காலில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மணல் திருட்டை தடுக்க ஸ்ரீரங்கம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட பொதுமக்கள் வேண்டுகோள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

    திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *