ஸ்ரீரங்கத்தில் மணல் கடத்தல் படுஜோர் கொள்ளையர்களுக்கு கடிவாளம் போடப்படுமா? அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர் பொதுமக்கள்.

திருச்சி, ஸ்ரீரங்கம், ஜன.21-

திருச்சியில் இன்று வரை காவிரி, கொள்ளிடம் ஆற்றில் எங்குமே மணல் குவாரி இயங்காத நிலையில் எந்தவித தடையும் இன்றி ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரையிலிருந்து எவ்வித தட்டுபாடு இன்றி மணல் கொள்ளையர்கள் கொஞ்சம் கூட அச்சமின்றி ஸ்ரீரங்கம் & மேலூர் பகுதிகளில் ஒவ்வொரு கட்டிடங்கள் முன்பும் குவியல் குவியலாக ஈரம் சொட்ட சொட்ட டிப்பர் லாரிகள், பிக்கப் வாகனங்களில் மூலம் மணல் வினியோகம் தாராளமாக நடந்து வருகிறது. இச்செய்தி எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தபோது என்பது தெரியவில்லை ஒருவேளை தாக்கத்தை ஏற்படுத்தினால் ஒவ்வொரு கட்டித்திற்கு முன்பு கொட்டப்படும் மணலை வெளியில் தெரியாமல் மறைக்க தற்போது பனி பொழிவு அதிகமாக இருப்பதால் திருட்டு மணலுக்கு குளிரும் என்பதால் வெளிவுலகத்திற்கு தெரியாமல் இருக்க முழுவதையும் தார்ப்பாய் போட்டு மூடப்படும் பணியும் அல்லது சாக்கு முட்டையில் நிரப்பி வைப்பதையும் காணமுடியும். மணல் கொள்ளையில் ஈடுபடுவர்கள் பாதுகாப்பதில், இதில் கட்சி பேதம் இன்றியும், எந்த இடத்தில் மணல் கொட்டப்படும் கட்டிடங்கள் வரை மணல் வாகனம் பாதுகாப்பாக செல்கிறதா என்பதை உறுதிபடுத்த ஒவ்வொரு முச்சந்தியிலும் ஆட்களின் நியமித்து யார் வருகிறார்கள் என்பதை கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அனைவரும் போனில் கான்பிரன்ஸ் காலில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மணல் திருட்டை தடுக்க ஸ்ரீரங்கம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட பொதுமக்கள் வேண்டுகோள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு! பயணிகள் அலறல்.. பஸ் உரிமையாளர்கள் மிரட்டல்.. போக்குவரத்து துறை தூங்குவது ஏன்? “பச்சக்கிளி முத்துச்சாரம்.. பார்க்காத பூமி ஏதம்!” ஆனால், திருச்சியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *