25 வருடங்களாக அம்மன் ஆலயத்திற்கு அட்ரஸ் காட்ட போராடிய மருத்துவர்.

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான திருக்கோவில் எலமனூர் எலுமனாட்சி அம்மன் திருக்கோயில். இந்த திருக்கோவிலுக்கு பெயர்ப்பலகை மின் விளக்கு ஒளியில் வைக்க வேண்டுமென்று கடந்த 23 ஆண்டுகளாக போராடி வருகிறார் ஒரு மனிதர்.

எலும்பு நோய் மருத்துவத்தில் நிபுணத்துவம் கொண்ட மருத்துவர் இளங்கோ MS ORTHO தமிழ்நாடு அரசின் உயர் பதவி வகித்தவர். தன்னுடைய ஓய்வுக்காலத்தில் தன் சொந்த கிராமமான எலமனூரில் உள்ள குலதெய்வம் எலுமனாட்சி அம்மன் கோவிலின் வழிகாட்டி பலகை ஒளியிழந்து இருப்பதைக்கண்ணுற்று வண்ண விளக்கொளியில் மின்னும் பெயர்ப்பலகை வைப்பதற்கான முயற்சியில் இறங்கினார். ஆனால்…….

நீங்கள் மருத்துவராக இருக்கலாம்……

அரசில் உயர் பதவி வகித்தவராக இருக்கலாம்…….

பெரும் தனவந்தனாக கூட இருக்கலாம்……..

ஆனால்………

நீங்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்தவர். அதனால்…….

அதனால் இந்தக்கோவிலுக்கு நீங்கள் செய்வதை எங்கள் சாதியினர் ஏற்க மாட்டார்கள்.

இதைக்கூறியவர் சாதி சங்க தலைவரோ…….

ஊர்த்தலைவரோ……..

கோவில் தர்மகர்த்தாவோ இல்லை…….

இதைக்கூறியவர்……

அரசுப்பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரி……

ஆம் அந்த அதிகாரிதான் திருப்பராய்த்துறை தாருகாவணேஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரி திருமதி.ராகிணி.

கோவில் செயல் அலுவலரான ராகிணி தன்னுடைய ஆணவப்போக்கினால் இவலை மட்டுமின்றி கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்காத வண்ணம் தடுத்து வந்திருக்கிறார்.

இந்தக்கொடுமையை என்னவென்று சொல்வது?

கடந்த 23 ஆண்டுகளாக போராடிய மருத்துவர் இன்று சட்டப்போராட்டத்தின் மூலமாக வென்றிருக்கிறார். அவருக்கு அந்த எலுமனாட்சியே அகிலாண்டேஸ்வரி ரூபத்தில் தேரில் வந்து உரிமை ஆணையை வழங்கியிருக்கிறார். இப்போது மிகவும் உற்சாகமாக இந்த தள்ளாத வயதிலுத் தன் மனைவியோடு கோவிலுக்கு வந்து தன் வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறார் இந்த மருத்துவர்.

நம் நியூ திருச்சி டைம்ஸ் சார்பாக போராளி ஐயா வை வாழ்த்துகிறோம்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *