தி.மு.க. கட்சி கொடியுடன் பேனர் வைத்த சர்வேயர் மீது நடவடிக்கையா..?

தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவராக இருப்பவர் திரு.வெ.மகேந்திரகுமார், மாநில பொதுச் செயலாளர் திரு.ஆ.பிரபு மற்றும் மாநிலப் பொருளாளர் திரு.சு.கார்த்திகேயன் ஆகியோர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தி.மு.க. கட்சி கொடியுடன் வாழ்த்து பேனர் வைத்தது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு நில அளவைத் துறையில் உள்ள இரண்டு சங்கங்களில் தங்களது சங்கம் அரசுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்று ஒரு பிம்பத்தை காட்டுவதற்காக பொது மக்களின் வரிப் பணத்தில் இருந்து சம்பளம் வாங்கும் அரசு ஊழியர் என்பதை மறந்து விட்டு தி.மு.க.வின் மாநில நிர்வாகிகள் போன்று தி.மு.க. கொடியோடு வாழ்த்து பேனர் வைத்தது தொடர்பாக தமிழக அரசின் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் திரு.மதுசூதன் ரெட்டி I.A.S . அவர்களிடம் சமூக ஆர்வலர் ஒருவர் ஆதார ஆவணங்களுடன் விரிவான புகார் மனு கொடுத்திருந்தார்.

இந்நிலையில் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் அவர்களின் கடித எண்.ந.க.ண2-18987-2024 படி விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அரசு ஊழியர்கள் அரசியலில் ஈடுபடுவதை முற்றிலும் தடுக்கும் வண்ணமாக அரசாணை வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..எதற்காக போரிட்டோமோ…அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்… -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்

    அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *