தி.மு.க. கட்சி கொடியுடன் பேனர் வைத்த சர்வேயர் மீது நடவடிக்கையா..?

தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவராக இருப்பவர் திரு.வெ.மகேந்திரகுமார், மாநில பொதுச் செயலாளர் திரு.ஆ.பிரபு மற்றும் மாநிலப் பொருளாளர் திரு.சு.கார்த்திகேயன் ஆகியோர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தி.மு.க. கட்சி கொடியுடன் வாழ்த்து பேனர் வைத்தது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு நில அளவைத் துறையில் உள்ள இரண்டு சங்கங்களில் தங்களது சங்கம் அரசுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்று ஒரு பிம்பத்தை காட்டுவதற்காக பொது மக்களின் வரிப் பணத்தில் இருந்து சம்பளம் வாங்கும் அரசு ஊழியர் என்பதை மறந்து விட்டு தி.மு.க.வின் மாநில நிர்வாகிகள் போன்று தி.மு.க. கொடியோடு வாழ்த்து பேனர் வைத்தது தொடர்பாக தமிழக அரசின் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் திரு.மதுசூதன் ரெட்டி I.A.S . அவர்களிடம் சமூக ஆர்வலர் ஒருவர் ஆதார ஆவணங்களுடன் விரிவான புகார் மனு கொடுத்திருந்தார்.

இந்நிலையில் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் அவர்களின் கடித எண்.ந.க.ண2-18987-2024 படி விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அரசு ஊழியர்கள் அரசியலில் ஈடுபடுவதை முற்றிலும் தடுக்கும் வண்ணமாக அரசாணை வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    மாடுபிடி வீரர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் சொல்வது எப்படி சாத்தியமாகும்- ஜல்லிக்கட்டு ராஜேஷ்

    திருச்சி, ஜன.24  பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களுக்கு கட்டாயமாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் – தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளர் திருச்சியில் பேட்டி இன்று காலை தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர்ஜல்லிக்கட்டு ராஜேஷ் செய்தியாளர்களுக்கு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *