தி.மு.க. கட்சி கொடியுடன் பேனர் வைத்த சர்வேயர் மீது நடவடிக்கையா..?

தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவராக இருப்பவர் திரு.வெ.மகேந்திரகுமார், மாநில பொதுச் செயலாளர் திரு.ஆ.பிரபு மற்றும் மாநிலப் பொருளாளர் திரு.சு.கார்த்திகேயன் ஆகியோர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தி.மு.க. கட்சி கொடியுடன் வாழ்த்து பேனர் வைத்தது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு நில அளவைத் துறையில் உள்ள இரண்டு சங்கங்களில் தங்களது சங்கம் அரசுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்று ஒரு பிம்பத்தை காட்டுவதற்காக பொது மக்களின் வரிப் பணத்தில் இருந்து சம்பளம் வாங்கும் அரசு ஊழியர் என்பதை மறந்து விட்டு தி.மு.க.வின் மாநில நிர்வாகிகள் போன்று தி.மு.க. கொடியோடு வாழ்த்து பேனர் வைத்தது தொடர்பாக தமிழக அரசின் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் திரு.மதுசூதன் ரெட்டி I.A.S . அவர்களிடம் சமூக ஆர்வலர் ஒருவர் ஆதார ஆவணங்களுடன் விரிவான புகார் மனு கொடுத்திருந்தார்.

இந்நிலையில் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் அவர்களின் கடித எண்.ந.க.ண2-18987-2024 படி விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அரசு ஊழியர்கள் அரசியலில் ஈடுபடுவதை முற்றிலும் தடுக்கும் வண்ணமாக அரசாணை வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

    திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா கணேசன் கல்லூரி தாளாளர் ராஜசேகரன் தற்போது திருச்சி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்-திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் அரசு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *