ஆண்மைக்குறைவிற்கான எளிய இயற்கை மருத்துவ உணவுகள்.

மரு.சுப்பையா பாண்டியன் RIMP

சித்த மருத்துவத்தில் ஆழ்ந்த ஞானமும் அனுபவமும் கொண்டவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சித்த மருத்துவத்தின் மூலம் பல நோயாளிகளின் நோய்களை குணப்படுத்தியவர்.

அவரிடம் இன்றைய இளைஞர்களை பெரிதும் தாக்கும் ஆண்மைக்குறைபாட்டினை நீக்குவதற்கான ஆலோசனைகளை கேட்ட பொழுது அதை கட்டுரையாக நமது இதழுக்கு தர ஒப்புதல் அளித்தார்.

அவரின் மருத்துவ ஆலோசனைகள் இனி உங்கள் பார்வைக்கு……

ஆண்மை குறைவா கவலை வேண்டாம்.

அற்புத மூலிகை மருத்துவம்

அம்மான் பச்சரிசியை தூதுவளையுடன் துவையல் செய்து சாப்பிட தாது பலப்படும்.

அம்மான் பச்சரிசி கீழாநெல்லி உடன் சம அளவு தயிரில் சாப்பிட தாது இழப்பு தீரும்.

ஓரிதழ் தாமரை பாலில் கலந்து சாப்பிட தாது விருத்தி பலப்படும். தாமரை விதையை பாலில் இரு வேலை சாப்பிட தாது விருத்தி கூடும். துளசி விதை சூரணம் தாம்பூலத்துடன் சாப்பிட தாது பலப்படும்.

வறுத்த திப்பிலிப்பொடி தேனில் காலை மாலை சாப்பிட தாது பலப்படும்.

கோரைக்கிழங்கு சூரணம் தேனில் காலை மாலை சாப்பிட தாது பலப்படும்.

தேங்காய் துவையல் கசகசா சேர்த்து அரைத்து காலை மாலை சாப்பிட தாது பலப்படும்.

பிரண்டை உப்புடன் சாதிக்காய் சூரணம் நெய்யில் சாப்பிட தாது பலப்படும்.

தாளிக்கீரை பருப்புடன் சமைத்து நெய்யுடன் சாப்பிட தாது பலப்படும்.

குமரி எண்ணெய் இரு வேலை சாப்பிடலாம்.

தூதுவளை பூ முருங்கைப்பூ பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி சாப்பிட தாது பலப்படும்.

வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து சாப்பிட தாது பலப்படும்.

காரைப் பழத்தினை சாப்பிட தாது பலப்படும்.

தென்னம்பாளை பிஞ்சுகளை பசும்பாலில் விட்டு அரைத்து சாப்பிட தாது பலப்படும்.

நீர்முள்ளி விதை நெருஞ்சில் விதை வெள்ளரிக்காய் விதை பனங்கற்கண்டு போட்டு காய்ச்சி அருந்த தாது பலப்படும்

உளுந்தக்களி சாப்பிட தாது பலப்படும்.

உளுந்த கஞ்சி சாப்பிட தாது பலப்படும்.

வில்வ பழம் கற்கண்டு சேர்த்து சாப்பிட தாது பலப்படும்.

அரிசி தவிடு பனைவெல்லம் சேர்த்து சாப்பிட உடல் பலம்.

தர்பூசணி கல்யாண பூசணி சாறு பனைவெல்லம் சேர்த்து சாப்பிட உடல் பலம் வரும்.

அதிமதுரம் தேன் வெண்ணை சேர்த்து பசும் பாலில் சாப்பிட தாது பலப்படும்.

தினமும் காலை ஐந்து சிறிய வெங்காயம் சாப்பிடலாம் பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு உலர் திராட்சை வால்நட் முந்திரி உலர் அத்திப்பழம் பேரிச்சி ஆகியவை வலுவூட்டும்.

முருங்கை இலைகளை நெய்யுடன் வறுத்து சாப்பிட தாது பலப்படும்.

விரை வீக்கம் தீர தொட்டால் சிணுங்கி இலைகளை கசக்கி தடவலாம்.

பூசணிக்க ஜாம் செய்து சாப்பிடலாம்.

தூதுவளை மலர்களை கொதிக்க வைத்து சாப்பிடலாம்.

ஜாதிபத்திரி வால்மிளகு கிராம்பு அரச மரத்து விதைகள் பால் கலந்து அரைத்து சாப்பிட தாது பலப்படும்.

இலந்தை பழம் எலுமிச்சை சாறு ஆகியவை ஆண்மை பெருக்கும்.

கலியுக சித்தர் டாக்டர் கே எஸ் சுப்பையா பாண்டியன்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *