நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறை திருமஞ்சனத்துறை ஆபத்தான பாலத்தை அந்தநல்லூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும் பொறியாளரும் இன்று ஆய்வு செய்தனர்

26/10/24 அன்று அபாயகரமான ஆற்றுப்பாலம். சரி செய்ய போராடும் சமூக ஆர்வலர்கள் – முதல்வர் முதல் அதிகாரிகள் வரை மனு சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை என்ற தலைப்பில் நமது நியூ திருச்சி டைம்ஸ் பதிப்பில் சனிக்கிழமை அன்று செய்தி வெளியிட்டு இருந்தோம்.

அதன் எதிரொலியாக இரண்டு நாட்கள் வார விடுமுறை கழிந்த பின்னர் இன்று, திங்கட்கிழமை காலையிலேயே உடனடியாக அரசு அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் பாலத்தை ஆய்வு செய்தனர்

திருப்பராய்த்துறையில் உள்ள திருமஞ்சனத்துறை பாலத்தில் அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு வேத லட்சுமி , அந்தநல்லூர் பொறியாளர் திருமதி ஜெயசுதா பாலத்தின் நிலை குறித்து ஆய்வு செய்தனர். திருப்பராய்த்துறை பஞ்சாயத்து செகரட்டரி திரு சேகர் உடனிருந்து பாலத்தின் நிறைகுறைகளை விளக்கினார்.

பாலத்தின் நிலை பராமரிப்பின்றி சேதம் அடித்து உள்ளது போல் தெரிகிறது என்றும், அதனை சிறு சிறு பராமரிப்பு பணிகள் செய்தாலே பாலம் இன்னும் 20 25 ஆண்டுகளுக்கு பயன்பாட்டில் இருக்கும் என்றும், மேலும் பாலத்தின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் இது சம்பந்தமாக *மாவட்ட கலெக்டர் இடம் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

திருப்பராய்த்துறை கிராம பொதுமக்களும், சிவன் அடியார்களும் சமூக ஆர்வலர்களும் நியூ திருச்சி டைம்ஸ்க்கு நன்றிகளை தெரிவித்தனர

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..எதற்காக போரிட்டோமோ…அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்… -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்

    அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *