நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறை திருமஞ்சனத்துறை ஆபத்தான பாலத்தை அந்தநல்லூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும் பொறியாளரும் இன்று ஆய்வு செய்தனர்

26/10/24 அன்று அபாயகரமான ஆற்றுப்பாலம். சரி செய்ய போராடும் சமூக ஆர்வலர்கள் – முதல்வர் முதல் அதிகாரிகள் வரை மனு சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை என்ற தலைப்பில் நமது நியூ திருச்சி டைம்ஸ் பதிப்பில் சனிக்கிழமை அன்று செய்தி வெளியிட்டு இருந்தோம்.

அதன் எதிரொலியாக இரண்டு நாட்கள் வார விடுமுறை கழிந்த பின்னர் இன்று, திங்கட்கிழமை காலையிலேயே உடனடியாக அரசு அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் பாலத்தை ஆய்வு செய்தனர்

திருப்பராய்த்துறையில் உள்ள திருமஞ்சனத்துறை பாலத்தில் அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு வேத லட்சுமி , அந்தநல்லூர் பொறியாளர் திருமதி ஜெயசுதா பாலத்தின் நிலை குறித்து ஆய்வு செய்தனர். திருப்பராய்த்துறை பஞ்சாயத்து செகரட்டரி திரு சேகர் உடனிருந்து பாலத்தின் நிறைகுறைகளை விளக்கினார்.

பாலத்தின் நிலை பராமரிப்பின்றி சேதம் அடித்து உள்ளது போல் தெரிகிறது என்றும், அதனை சிறு சிறு பராமரிப்பு பணிகள் செய்தாலே பாலம் இன்னும் 20 25 ஆண்டுகளுக்கு பயன்பாட்டில் இருக்கும் என்றும், மேலும் பாலத்தின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் இது சம்பந்தமாக *மாவட்ட கலெக்டர் இடம் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

திருப்பராய்த்துறை கிராம பொதுமக்களும், சிவன் அடியார்களும் சமூக ஆர்வலர்களும் நியூ திருச்சி டைம்ஸ்க்கு நன்றிகளை தெரிவித்தனர

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *