நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறை திருமஞ்சனத்துறை ஆபத்தான பாலத்தை அந்தநல்லூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும் பொறியாளரும் இன்று ஆய்வு செய்தனர்

26/10/24 அன்று அபாயகரமான ஆற்றுப்பாலம். சரி செய்ய போராடும் சமூக ஆர்வலர்கள் – முதல்வர் முதல் அதிகாரிகள் வரை மனு சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை என்ற தலைப்பில் நமது நியூ திருச்சி டைம்ஸ் பதிப்பில் சனிக்கிழமை அன்று செய்தி வெளியிட்டு இருந்தோம்.

அதன் எதிரொலியாக இரண்டு நாட்கள் வார விடுமுறை கழிந்த பின்னர் இன்று, திங்கட்கிழமை காலையிலேயே உடனடியாக அரசு அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் பாலத்தை ஆய்வு செய்தனர்

திருப்பராய்த்துறையில் உள்ள திருமஞ்சனத்துறை பாலத்தில் அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு வேத லட்சுமி , அந்தநல்லூர் பொறியாளர் திருமதி ஜெயசுதா பாலத்தின் நிலை குறித்து ஆய்வு செய்தனர். திருப்பராய்த்துறை பஞ்சாயத்து செகரட்டரி திரு சேகர் உடனிருந்து பாலத்தின் நிறைகுறைகளை விளக்கினார்.

பாலத்தின் நிலை பராமரிப்பின்றி சேதம் அடித்து உள்ளது போல் தெரிகிறது என்றும், அதனை சிறு சிறு பராமரிப்பு பணிகள் செய்தாலே பாலம் இன்னும் 20 25 ஆண்டுகளுக்கு பயன்பாட்டில் இருக்கும் என்றும், மேலும் பாலத்தின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் இது சம்பந்தமாக *மாவட்ட கலெக்டர் இடம் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

திருப்பராய்த்துறை கிராம பொதுமக்களும், சிவன் அடியார்களும் சமூக ஆர்வலர்களும் நியூ திருச்சி டைம்ஸ்க்கு நன்றிகளை தெரிவித்தனர

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *