கடிக்க வரும் குரங்கிடமிருந்து காப்பாற்ற மக்கள் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை, நந்தவனப் பகுதியில் நீண்ட நாட்களாக ஒரு ஒற்றை குரங்கு ஒன்று மக்களையும். ஆடு மாடுகளையும். நாய்களையும். தொந்தரவு செய்து வருகின்றது மற்றும் மக்கள் சமைத்து வைத்துவிட்டு வேலைக்கு சென்றால் இந்த குரங்கு வீட்டினுள் புகுந்து சமைத்து வைத்த உணவுகளை தின்றுவிட்டு பாத்திரங்களை உடைத்து விட்டு செல்கின்றது.

இன்று நந்தவனத்தில் ஒரு ஆட்டை கடித்து அந்த ஆட்டுக்கு கன்னங்கள் மிகவும் வீக்கத்துடன் காணப்படுகிறது. அந்த குரங்கை மக்கள் துரத்தினால் அது பயங்கர கோபத்துடன் கடிக்க வருகிறது. இங்கு சிறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது குழந்தைகளையும் துரத்துகின்றது, அந்த குழந்தைகள் பயத்துடன் ஓடி வரும்பொழுது கீழே விழுந்து காயங்கள் ஏற்படுகின்றன.

இந்த குரங்கின் சேட்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது நந்தவனத்தில் இன்று ஆட்டை கடித்து விட்டது அது மனிதர்களை கடித்து மனிதர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் முன்பு தயவு செய்து இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள்.

ஆகவே நந்தவனத்தில் நீண்ட நாள் அச்சுறுத்தல் தரும் இந்த ஒற்றை குரங்கை பிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி மக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *