திருச்சியில் அரசின் விதியை மீறி பணியாற்றும் வட்டாட்சியர்களுக்கான பணியிட மாற்றம் எப்போது..??

தமிழக அரசின் வருவாய்த்துறையில் பணியாற்றும் வட்டாட்சியர்களுக்கு பொது பிரிவில் பணியாற்ற ஓராண்டு மட்டுமே பணிக் காலம் என்ற விதி இருந்தும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் பணி மூப்பு அடிப்படையில் வட்டாட்சியர்களுக்கான பணியிட மாற்றம் நடைபெற்ற வேண்டும்.

ஆனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் பணியாற்றும் வட்டாட்சியர்களில் பெரும்பாலானோர் மாவட்ட அமைச்சர்களின் தயவில் ஓராண்டுக்கு மேலாகவும், ஒரு சிலர் இரண்டு ஆண்டுகள் வரை தொடர்ந்து ஒரே வட்டத்தில் பணி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒவ்வொரு மாதமும், வட்டாட்சியருக்களுக்கான பணியிட மாற்றம் குறித்த மாவட்ட ஆட்சியருக்கு கோப்பு அனுப்பியும், அமைச்சர்களின் நெருக்கடியால் வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யாமல் பல மாத காலமாக நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    ஸ்ரீரங்கம் தொகுதியில்அ.தி.மு.க. வேட்பாளர் ஆர். மனோகரனுக்குசெல்லும் இடமெல்லாம் மக்கள் அமோக ஆதரவு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு

    திருச்சி ஏப்.10-ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்ஆர். மனோகரன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிராமம் கிராமமாக சென்று, வீதி வீதியாக வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார். இவருக்கு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் அமோக ஆதரவை அளித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *