காத்துவாக்குல ஒரு கிசு கிசு – பாவம்யா…. நம்மவர்

🦉🕵️அப்படியா.. சங்கதி?🫢

கமலுக்கு ஒதுக்கீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட அந்த ஒரு எம்.பி. சீட்டை, தங்களுக்கு விட்டுக் கொடுக்க முடியுமா? என்று கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது திமுக.

ஆம் கமலுக்கு கொடுக்கப்பட்ட சீட்டை திரும்ப பெற்றுக்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாம்.

இதன் பொருட்டுதான் திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீரென்று சந்தித்து பேசியுள்ளார். முதலில் கமலின் விருப்பத்தை அறிய அமைச்சர் சேகர்பாபுவை அனுப்பி வைத்துள்ளது திமுக தலைமை. அவரும் கமலை சந்தித்து பேசியிருக்கிறார். ராஜ்யசபா சீட்டை விட்டுக்கொடுக்கும் பட்சத்தில், அதற்கு பிரதிபலனாக வேறு வகையில் அதனை ஈடுக்கட்ட தயாராக இருப்பதாகவும் நடிகர் கமலிடம் சேகர்பாபு சொல்லியிருந்தாராம்.

சேகர்பாபுவிடம் எந்த முடிவையும் தெரிவிக்காத கமலை இன்னிக்கு சின்னவர் மீட் செஞ்சு அந்த எம்பி சீட்டுக்கு ஈக்வலா என்ன வேண்டும் என்று நேரடியாகக் கேட்டதைக் கேட்டு ஏகத்துக்குக் குழம்பிப் போய் பதில் ஏதும் சொல்லாமல் துணைமுதல்வரை சமாளித்து அனுப்பி விட்டாராம் முன்னாள் பிக் பாஸ்..! இன்னும் ஓரிரு நாளில் ஸ்டாலினுடன் கமல் மீட் இருக்குமாம்.!

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பிறந்தநாள் – திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை:-

    மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க… கழகத்திற்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின்…

    அடுத்த தேர்தலை மனதில் வைத்து ஆட்சி நடத்துவதை காட்டிலும் அடுத்த தலைமுறை மனதில் வைத்து ஆட்சி நடத்தக்கூடியவர் தான் நமது தமிழக முதல்வர் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி

    திருச்சி கிழக்குத் தொகுதியில்தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை பொதுக்கூட்டம். திருச்சி இ.பி. ரோட்டில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்குத் தொகுதியில் தமிழ்நாடு தலைகுனியாது பரப்பரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. வரவேற்புரை மாநகரக் கழகச் செயலாளர்மு.மதிவாணன் தலைமை ஏற்று சிறப்புரை திருச்சி தெற்கு மாவட்ட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *