சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்து தரப்படுமா

சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்து தரப்படுமா

திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறையில் சமத்துவ சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதையில் மரம் விழுந்து பாதை மூடப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட பத்து நாட்களாகியும், மரம் அகற்றப்படவில்லை.

மரம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது , ஆகவே கோயில் நிர்வாகத்திடம் இது சம்பந்தமாக ஊர் பொதுமக்களும் , பட்டயதார்களு ஏற்கனவே தகவல் தெரிவித்து விட்டனர், ஆனால் இன்று வரை மரம் அகற்றப்படவில்லை. இந்த ஒரு பாதையை விட்டால் இந்த சுடுகாட்டை அடைய வேறு வழி இல்லை.

அறநிலையத்துறை அனுமதி வழங்கினால் ஊராட்சி நிர்வாகம் மரத்தை வெட்டி தருவதற்கு தயாராக உள்ளதாக கூறுகின்றனர்.

பல நாட்களாகியும் இன்று வரை மரம் அகற்றப்படவில்லை, அறநிலை துறை இந்த மரத்தை வெட்டி பாதையை சரி செய்து தர வேண்டும் அல்லது மரத்தை வெட்டி பாதையை சரி செய்வதற்கு ஊராட்சி நிர்வாகத்திற்கு அனுமதி வழங்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *