சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்து தரப்படுமா

சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்து தரப்படுமா

திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறையில் சமத்துவ சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதையில் மரம் விழுந்து பாதை மூடப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட பத்து நாட்களாகியும், மரம் அகற்றப்படவில்லை.

மரம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது , ஆகவே கோயில் நிர்வாகத்திடம் இது சம்பந்தமாக ஊர் பொதுமக்களும் , பட்டயதார்களு ஏற்கனவே தகவல் தெரிவித்து விட்டனர், ஆனால் இன்று வரை மரம் அகற்றப்படவில்லை. இந்த ஒரு பாதையை விட்டால் இந்த சுடுகாட்டை அடைய வேறு வழி இல்லை.

அறநிலையத்துறை அனுமதி வழங்கினால் ஊராட்சி நிர்வாகம் மரத்தை வெட்டி தருவதற்கு தயாராக உள்ளதாக கூறுகின்றனர்.

பல நாட்களாகியும் இன்று வரை மரம் அகற்றப்படவில்லை, அறநிலை துறை இந்த மரத்தை வெட்டி பாதையை சரி செய்து தர வேண்டும் அல்லது மரத்தை வெட்டி பாதையை சரி செய்வதற்கு ஊராட்சி நிர்வாகத்திற்கு அனுமதி வழங்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *