RTO அலுவலகங்களில் புரோக்கர்களின் ஆதிக்கம்- தடை செய்யும் அரசு நிர்வாகம்?

கோவை ஆர்டிஓ அலுவலகங்களில் இடைத்தரகர்கள் நுழைய தடை. திருச்சியில் நடைமுறைப்படுத்தப்படுமா?

கோவை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தொடர்ந்து இடைத்தரர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்ததை அடுத்து தொடர் புகார்கள் சென்றதன் எதிரொலியாக கோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கர்கள் உள்ளே நுழைய தடை செய்யப்பட்டு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல் திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சப் புகார் காரணமாக லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு ஊழியர்களின் மேல் விசாரணையும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கர்களின் ஆதிக்கம் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா இருந்த பொழுதிலும் கவுண்டர்களில் வரிசையில் அவர்களே அதிக அளவில் இருக்கின்றனர். இது பற்றி அலுவலக ஊழியர்களிடம் கேட்டபொழுது அலுவலக விவரங்கள் அனைத்தும் அவர்களுக்கே தெரியும் என்றும் அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர். கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்கள் உள்ளே நுழைய தடை செய்யப்பட்டு சுற்றறிக்கை வழங்கிய நிலையில் ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சியில் உள்ள மற்ற போக்குவரத்து வட்டார அலுவலகங்களுக்கும் இது நடைமுறைப்படுத்தப்படுமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

    திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *