RTO அலுவலகங்களில் புரோக்கர்களின் ஆதிக்கம்- தடை செய்யும் அரசு நிர்வாகம்?

கோவை ஆர்டிஓ அலுவலகங்களில் இடைத்தரகர்கள் நுழைய தடை. திருச்சியில் நடைமுறைப்படுத்தப்படுமா?

கோவை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தொடர்ந்து இடைத்தரர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்ததை அடுத்து தொடர் புகார்கள் சென்றதன் எதிரொலியாக கோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கர்கள் உள்ளே நுழைய தடை செய்யப்பட்டு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல் திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சப் புகார் காரணமாக லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு ஊழியர்களின் மேல் விசாரணையும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கர்களின் ஆதிக்கம் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா இருந்த பொழுதிலும் கவுண்டர்களில் வரிசையில் அவர்களே அதிக அளவில் இருக்கின்றனர். இது பற்றி அலுவலக ஊழியர்களிடம் கேட்டபொழுது அலுவலக விவரங்கள் அனைத்தும் அவர்களுக்கே தெரியும் என்றும் அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர். கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்கள் உள்ளே நுழைய தடை செய்யப்பட்டு சுற்றறிக்கை வழங்கிய நிலையில் ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சியில் உள்ள மற்ற போக்குவரத்து வட்டார அலுவலகங்களுக்கும் இது நடைமுறைப்படுத்தப்படுமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *