மத்திய தொழிற்சங்கத்தின் சார்பில் மே 25-ந் தேதி நடைபெற உள்ளஅகில இந்திய பொது வேலை நிறுத்தம் குறித்த மண்டல மாநாடு – திருச்சி உள்பட 9 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

திருச்சி, மார்ச்.21-

மத்திய தொழிற்சங்கத்தின் சார்பில் மே மாதம் 25ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் பங்கு பெற உள்ள திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் பங்கு பெறும் ஆயத்த திருச்சி மண்டல மாநாடு திருச்சி மத்திய பேருந்து அருகிலுள்ள சீனிவாசா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின்
மாநில பேரவை அமைப்பாளர் பேரறிவாளன்,நிர்வாகிகள் பேரவை மாநில பொறுப்பாளர்
மகிழரசு, தொழிலாளர் விடுதலை முன்னணியின் முன்னணி பொறுப்பாளர்கள்
இரா.விஜயபாலு,
பச்சைமால், இளந்தமிழன்.
வீரச்செல்வன், முத்து,
சிவக்குமார், முத்தைய்யன்,
பிரபாகரன் மற்றும்
திமுக தொழிற்சங்கத்தின் நிர்வாகி வள்ளுவன், சிஐடியு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கண்ணன், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்து மஸ்த்தூர் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணி, ஏ.ஐ.சி.சி.டி.யு மாநில தலைவர் மதியழகன் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத கார்ப்பரேட் ஆதரவு தொழிலாளர் சட்டத் தொகுப்பு அமலாக்கத்தை தடுத்து நிறுத்தவும்,
பொதுமக்களின் சொத்துக்களை அதானி, அம்பானிகளுக்கு தாரை வார்ப்பதை தடுத்திடவும்,
பாசிச,பா.ஜ.க. மதவெறி கும்பலை விரட்டி அடிக்கவும், தொழிலாளர்கள் – விவசாயிகளை ஓரணியில் திரட்டவும், தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதியை தராமலும், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும் நடைபெற உள்ள வேலை நிறுத்தம் தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    மாடுபிடி வீரர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் சொல்வது எப்படி சாத்தியமாகும்- ஜல்லிக்கட்டு ராஜேஷ்

    திருச்சி, ஜன.24  பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களுக்கு கட்டாயமாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் – தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளர் திருச்சியில் பேட்டி இன்று காலை தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர்ஜல்லிக்கட்டு ராஜேஷ் செய்தியாளர்களுக்கு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *