செயின் பறிப்பு சம்பவங்கள் – தீவிர வாகன சோதனையில் திருவெறும்பூர் சரக காவல்துறை

திருச்சி திருவெறும்பூர் மார்ச் 27 பெரியசாமி 9790180409
9791664509

தமிழக முழுவதும் இருசக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பு மற்றும் குற்ற சம்பவம் ஈடுபடு அதிகரித்து வரும் நிலையில் திருச்சி துவாக்குடி toll plaza வில் திருவெறும்பூர் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் துவாக்குடி போக்குவரத்து ஆய்வாளர் இணைந்து துவாக்குடி அனைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். தஞ்சை திருச்சி மற்றும் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களையும் நிறுத்தி பரிசோதனை செய்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி திருவெறும்பூர் காவல் உதவி கண்காணிப்பாளர் (DSP) அவர்களின் அறிவுறுத்தலின் படியும்

திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து வாகனங்களும் ஆர் சி இன்சூரன்ஸ் மற்றும் லைசன்ஸ் உள்ளதா மற்றும் நம்பர் பிளேட் சரியாக உள்ளதா என சோதனை செய்து வருகின்றனர்.

சோதனையின் போது பழைய நிலுவையில் உள்ள அபதாரத் தொகை பைன் உள்ளதா அப்படி இருந்தால் அவர்களுக்கு உரிய நேரத்தில் இந்த அபதார தொகையை கட்டிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் நடக்கும் விபத்துக்களை பற்றி ஆய்வாளர்கள் எடுத்து கூறினர்.

மேலும் இங்கு பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் அனைத்தும் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று அவர்கள் நம்பர் பிளேட் முறையாக எழுதப்பட்டு வந்தவுடன் இருசக்கர வாகனத்தை அவரிடம் ஒப்படைக்கப்படும் என ஆய்வாளர்கள் கூறினர்.

மேலும் இந்த சோதனையானது வெவ்வேற இடத்திலும் அடிக்கடி நடைபெறும் என பொதுமக்களுக்கு மற்றும் வாகன ஓட்டினர் தெரிவித்தனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *