குளங்களில் உள்ள வண்டல் மண்ணை எந்தவித கட்டுப்பாடும் இன்றி எளிமையாக விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியருக்கு தமிழ் மாநில காங்கிரஸின் விவசாய பிரிவு கோரிக்கை

இன்று திருச்சிராப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டியின் விவசாய பிரிவு சேர்ந்த நிர்வாகிகள் திருச்சி மத்திய மாவட்ட தலைவர் கே டி தனபால் மண்டல துணைத் தலைவர் ராஜேந்திரன் புங்கனூர் சத்யம் புங்கனூர் சின்னத்தம்பி அருவாக்குடி நடராஜன் அருவாக்குடி மாரிமுத்து உட்பட முக்கிய நிர்வாகிகள் நேரடியாக வந்திருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் தங்கள் கோரிக்கை மனுவை அழித்தனர் அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்தது விவசாயிகளின் சாகுபடி நிலங்களை வளப்படுத்த ஏரிகளில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக கோரிக்கை மனு அளித்திருந்தனர் அதில் விவசாயிகள் தங்கள் நிலங்களை வளப்படுத்த கால்நடைகளின் கழிவுகள் விவசாய நிலங்களில் சேர்த்து செழிப்பாக விவசாயம் செய்வதாகவும் தற்பொழுது கால்நடைகளின் எண்ணிக்கை பெரும் அளவில் குறைந்துவிட்ட காரணத்தினால் நாட்டு மாடுகள் பெருவாயாக விவசாயிகளிடம் தற்பொழுது இல்லை வேளாண் கருவிகள் பயன்பட்டாலும் இடவசதி இன்மை காரணமாகவும் கால்நடை வளர்ப்பு குறைந்துவிட்டது எனவும் தற்பொழுது செயற்கை உரத்திற்கு மாற்றாக விவசாய நிலங்களை வளப்படுத்த வண்டல் மண்ணை நம்பி விவசாயிகளின் நிலை உள்ளதாகவும் தங்கள் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள நீர்வளத் துறைக்கு சொந்தமான அனைத்து குளங்களிலும் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப போதுமான வண்டல் மண் எந்தவித கட்டுப்பாடும் இன்றி எளிமையாக அந்தந்த பகுதி விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள தடையில்லா சான்று வழங்கப்படுகிறது மேலும் விவசாயிகளுக்கு டிராக்டரில் மட்டும் வண்டல் மண் எடுத்து செல்ல அனுமதி உள்ள நிலையில் மேலும் அதிகப்படியான வண்டல் மண் எடுத்து செல்ல இயலவில்லை என்றும் செலவினங்கள் மற்றும் ஆட்கள் பணி அதிகமாகதாலும் விவசாயிகளின் இயலாத ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு டிப்பர் லாரிகளில் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்றும் தங்களை தாழ்மையோடு வேண்டுவதாக அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    மாடுபிடி வீரர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் சொல்வது எப்படி சாத்தியமாகும்- ஜல்லிக்கட்டு ராஜேஷ்

    திருச்சி, ஜன.24  பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களுக்கு கட்டாயமாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் – தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளர் திருச்சியில் பேட்டி இன்று காலை தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர்ஜல்லிக்கட்டு ராஜேஷ் செய்தியாளர்களுக்கு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *