தமிழக முதல்வரின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மற்றும் மாவட்ட தொண்டர் அணி இணைந்து மாபெரும் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மாபெரும் சிலம்பம் போட்டி

கண்ணன் பஞ்சாபி மாவட்ட செய்தியாளர்

திருவெறும்பூர்: மா27
தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவானது தமிழக முழுவதும் வெகு எழுச்சியாக நடைபெற்று வருகிறது

மேலும் இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக செயலாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட வழக்கறிஞர்அணி அமைப்பாளர் தினகரன் மற்றும் மாவட்ட தொண்டர்அணி அமைப்பாளர் உதயகுமார்ஆகியோர் தலைமையில் மாவட்ட வழக்கறிஞர்அணி மற்றும் மாவட்ட தொண்டர்அணி சார்பில் இணைந்து மார்க்கெட் ஈ பி ரோடு மதுரம் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் மாபெரும் சிலம்பம்போட்டி நடைபெற்றது
மேலும் இந்த சிலம்பம் போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.

இந்த சிலம்பம் போட்டியில் 7வயது முதல் 10 வயது உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் 11 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் 15 வயது முதல் 17 வயது குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் 17 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் என சுமார்115 பள்ளி மாணவ மாணவிகள் இந்த சிலம்பம்போட்டியில் கலந்து கொண்டனர்

தனித்தனி சுற்றுகலாக நடை பெற்ற இந்த சிலம்பம்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாநகர செயலாளர் மண்டல குழு தலைவருமான மதிவாணன் மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்

மேலும் இந்த சிலம்பம் போட்டியில் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் பன்னீர்செல்வன் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை தலைவர் பாலசுப்பிரமணியன் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் கண்ணன் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ராஜலிங்கம் மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் ஜெயசித்ரா மற்றும் மாவட்ட தொண்டர் அணி தலைவர் முத்துச்சாமி மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் தேவராஜன் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்‌

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *