ஆதரவற்ற முதியவர் மரணம்- நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்

திருச்சிராப்பள்ளி தலைமை தபால் அலுவலகம் அருகில்
சுமார் 65 மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் காணப்பட்டார். தகவல் அறிந்த திருச்சிராப்பள்ளி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தினர் விசாரிக்கையில் இறந்த முதியவர் பெயர் விலாசம் ஏதும் தெரியவில்லை. சில காலமாக அந்த பகுதியில் யாசகம் பெற்று உண்டு, உறங்கி வாழ்ந்து வந்துள்ளார். மேற்படி நபரின் உடலை யாரும் உரிமை கோராத நிலையில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் டேவிட்சாலமோன் நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில்
திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில்
சிறப்பு உதவி ஆய்வாளர் முன்னிலையில்
யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *