ஆயுள் கைதியை சித்ரவதை செய்த விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட பெண் டி.ஐ.ஜி., ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்

ஆயுள் கைதியை சித்ரவதை செய்த விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட பெண் டி.ஐ.ஜி., ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவரை சிறைத்துறை டி.ஐ.ஜி., ராஜலட்சுமி தமது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியாக தொடர்ச்சியான புகார்கள் எழுந்தன. இது குறித்து கைதியின் தாயார் புகார் அளித்திருந்தார். அதில் தமது மகனை போலீசார் கொடுமைப்படுத்தியதாகவும், வீட்டு வேலையின் போது பணம், பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டியதாகவும் கூறி இருந்தார்.

இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. டி.ஐ.ஜி., ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி., அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில், கைதி சித்ரவதை வழக்கில் நேற்று வரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்த டி.ஐ.ஜி., ராஜலட்சமி அதிரடியாக இன்று சஸ்பென்ட் செய்யப்பட்டு உள்ளார். அவருடன் சேர்த்து, கூடுதல் எஸ்.பி., அப்துல் ரஹ்மான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோரும் சஸ்பென்ட் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை சிறைத்துறை டி.ஜி.பி., மகேஸ்வர தயாள் வெளியிட்டு உள்ளார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) சார்பில் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம்

    திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில், கல்லூரிக்கு வருகை தரும் மாணவிகளை தொடர்ந்து இழிவாகவும் கொச்சையாகவும் பேசிய கல்லூரி முதல்வர் சத்தியா அவர்களை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) சார்பில் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. தினந்தோறும் கல்லூரிக்கு வருகை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *