ஆயுள் கைதியை சித்ரவதை செய்த விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட பெண் டி.ஐ.ஜி., ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்

ஆயுள் கைதியை சித்ரவதை செய்த விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட பெண் டி.ஐ.ஜி., ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவரை சிறைத்துறை டி.ஐ.ஜி., ராஜலட்சுமி தமது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியாக தொடர்ச்சியான புகார்கள் எழுந்தன. இது குறித்து கைதியின் தாயார் புகார் அளித்திருந்தார். அதில் தமது மகனை போலீசார் கொடுமைப்படுத்தியதாகவும், வீட்டு வேலையின் போது பணம், பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டியதாகவும் கூறி இருந்தார்.

இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. டி.ஐ.ஜி., ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி., அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில், கைதி சித்ரவதை வழக்கில் நேற்று வரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்த டி.ஐ.ஜி., ராஜலட்சமி அதிரடியாக இன்று சஸ்பென்ட் செய்யப்பட்டு உள்ளார். அவருடன் சேர்த்து, கூடுதல் எஸ்.பி., அப்துல் ரஹ்மான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோரும் சஸ்பென்ட் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை சிறைத்துறை டி.ஜி.பி., மகேஸ்வர தயாள் வெளியிட்டு உள்ளார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *