1989இல் இருந்த பொன்னர் சங்கம் பட்டி துறையூர் தாலுகா தலைவராக இருந்த கோபால் மற்றும் அவரோடு 9 வார்டு உறுப்பினர்கள் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிறைவேற்றுவது சம்பந்தமாக மனு மற்றும் சிட்டா அடங்கல் A ரிஜிஸ்டர் பெயர் மாற்றம் சம்பந்தமாக இன்று அந்த கிராமத்து மக்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் பொன்னர் சங்கம் பட்டி துறையூர் தாலுகாவில் அமைந்துள்ள முத்துராஜா தெரு, வடக்கு நாயக்கர் தெருவில் 22 சென்ட் நிலத்தில் நான்கு தலைமுறைகளாக 100 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த கிராம ரக்காட்டில் சுக்கிரமணியன் என்று ஏ ரிஜிஸ்டர் சிட்டா பட்டங்களில் உள்ளது ஆனால் அந்த சுக்கிரமணியன் என்பவர் யார் என்று தெரியாது எங்கள் பரம்பரையில் அந்த பெயரில் அப்படி ஒரு நபரே இல்லை என்றும் அவர்களின் குலதெய்வமான அருள்மிகு வீரமாத்தி அம்மன் திருக்கோவில் 4A லவ் கிராம ரக்காட்டில் மாற்றித்தருமாறு கேட்டும் வீரமாத்தி அம்மன் கோவிலில் 30 வருடங்களாக அவர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருவதாகவும் கிராம தலைவர் கோபால் மற்றும் அவரோடு ஒன்பது வார்டு உறுப்பினர்கள் உட்பட நத்தம் புறம்போக்கு இடம் இருந்ததாகவும் அப்பொழுது அந்த தலைவர் அந்த இடத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பால் சொசைட்டி மற்றும் நூலகம் அமைத்து தர தீர்மானம் நிறைவேற்றி யூனியன் ஆபீசில் ஒப்படைத்ததாக கூறுகிறார்கள் அப்பொழுது இருந்த வீடியோ சம்மதித்து நூலகமும் பால் சொசைட்டியும் கட்டித்தர சம்மதித்தார்கள் ஆனால் 2024 ஆம் வருடம் வரை அந்த தீர்மானத்தை நிறைவேற்றவில்லை இப்பொழுது கிராம நிர்வாக அலுவலர் கணேசன், தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அந்த இடத்தை தனி நபர் சிவா என்பவருக்கு சப்டிவிஷன் ஏற்படுத்தி அவருக்கு கோவில் கட்ட அனுமதி கடிதம் கொடுத்துள்ளதாகவும் இதை அறிந்ததால் எங்கள் நூறு குடும்பமும் அதிர்ந்து போய் உள்ளோம் என்றும் மேலும் இது தொடர்பாக பலமுறை முசிறி ஆர்டிஓ மற்றும் துறையூர் வட்டாட்சியர் அவர்களிடம் இது பற்றி கேட்ட பொழுதும் அவர்கள் விஏஓ மீதும் சிவா மீதும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் உடனடியாக எது தொடர்பாக விசாரணை செய்து உடனடியாக எங்களுக்கு நல்ல தீர்வை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

    திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா கணேசன் கல்லூரி தாளாளர் ராஜசேகரன் தற்போது திருச்சி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்-திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் அரசு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *