1989இல் இருந்த பொன்னர் சங்கம் பட்டி துறையூர் தாலுகா தலைவராக இருந்த கோபால் மற்றும் அவரோடு 9 வார்டு உறுப்பினர்கள் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிறைவேற்றுவது சம்பந்தமாக மனு மற்றும் சிட்டா அடங்கல் A ரிஜிஸ்டர் பெயர் மாற்றம் சம்பந்தமாக இன்று அந்த கிராமத்து மக்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் பொன்னர் சங்கம் பட்டி துறையூர் தாலுகாவில் அமைந்துள்ள முத்துராஜா தெரு, வடக்கு நாயக்கர் தெருவில் 22 சென்ட் நிலத்தில் நான்கு தலைமுறைகளாக 100 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த கிராம ரக்காட்டில் சுக்கிரமணியன் என்று ஏ ரிஜிஸ்டர் சிட்டா பட்டங்களில் உள்ளது ஆனால் அந்த சுக்கிரமணியன் என்பவர் யார் என்று தெரியாது எங்கள் பரம்பரையில் அந்த பெயரில் அப்படி ஒரு நபரே இல்லை என்றும் அவர்களின் குலதெய்வமான அருள்மிகு வீரமாத்தி அம்மன் திருக்கோவில் 4A லவ் கிராம ரக்காட்டில் மாற்றித்தருமாறு கேட்டும் வீரமாத்தி அம்மன் கோவிலில் 30 வருடங்களாக அவர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருவதாகவும் கிராம தலைவர் கோபால் மற்றும் அவரோடு ஒன்பது வார்டு உறுப்பினர்கள் உட்பட நத்தம் புறம்போக்கு இடம் இருந்ததாகவும் அப்பொழுது அந்த தலைவர் அந்த இடத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பால் சொசைட்டி மற்றும் நூலகம் அமைத்து தர தீர்மானம் நிறைவேற்றி யூனியன் ஆபீசில் ஒப்படைத்ததாக கூறுகிறார்கள் அப்பொழுது இருந்த வீடியோ சம்மதித்து நூலகமும் பால் சொசைட்டியும் கட்டித்தர சம்மதித்தார்கள் ஆனால் 2024 ஆம் வருடம் வரை அந்த தீர்மானத்தை நிறைவேற்றவில்லை இப்பொழுது கிராம நிர்வாக அலுவலர் கணேசன், தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அந்த இடத்தை தனி நபர் சிவா என்பவருக்கு சப்டிவிஷன் ஏற்படுத்தி அவருக்கு கோவில் கட்ட அனுமதி கடிதம் கொடுத்துள்ளதாகவும் இதை அறிந்ததால் எங்கள் நூறு குடும்பமும் அதிர்ந்து போய் உள்ளோம் என்றும் மேலும் இது தொடர்பாக பலமுறை முசிறி ஆர்டிஓ மற்றும் துறையூர் வட்டாட்சியர் அவர்களிடம் இது பற்றி கேட்ட பொழுதும் அவர்கள் விஏஓ மீதும் சிவா மீதும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் உடனடியாக எது தொடர்பாக விசாரணை செய்து உடனடியாக எங்களுக்கு நல்ல தீர்வை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *