“மத்து” குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் மத்து குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,
இரண்டு விதமான மத்து மக்களோட வாழ்வியலில் இருக்கிறது. ஒன்னு சாம்பாருக்காக பருப்பு கடைவதற்கு பயன்படுகிறது. இண்டாவது தயிர் கடைஞ்சு அதிலிருந்து வெண்ணெயை பிரித்தெடுக்க பயன்படுகிறது.
தயிரை கடைந்து வெண்ணெய் பெறுவதற்காக பயன்படுத்தும் மத்துவகைகளில் இரண்டு உள்ளது.
சுவரை ஒட்டி ஒரு சிறிய கொம்பு நட்டிருப்பார்கள் அல்லது வீட்டிலுள்ள மரத்தூண்களில், ஒரு கயிறு கட்டி இருக்கும், தயிர் கடைய “மத்து” இருக்கும். அந்த மத்தின் மையப் பகுதியில் கயிறு சுற்றுவதற்கு ஏற்றவாறு வடிவமைப்பு இருக்கும், நின்றுகொண்டே கடைவதற்கு ஏற்றவாறு 5, 6 அடி நீளமுள்ளதாக இருக்கும். அதிக அளவு தயிரினை கடைவது இம்முறையில். மற்றொன்று உட்கார்ந்து கொண்டு கடைவது போல சிறிய அளவில் இருக்கும். இது குறைவான அளவு தயிரை கடைவதற்கு பயன்படும் என்றார்.திருச்சி பிஷப் ஹீபர் தன்னாட்சிக் கல்லூரி வரலாற்று துறை முதுகலை மாணவர்கள் அபிஷேக், அனு பிரியா, அரிஸ்டோ வசந்தகுமார், திவாகரன், கிஷோர் குமார், கிஷோர், சஞ்ஜய்குமார், லோகேஷ்வரன், உதயகுமார், நரேஷ் பாபு, சித்தார்த் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *