“மத்து” குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் மத்து குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,
இரண்டு விதமான மத்து மக்களோட வாழ்வியலில் இருக்கிறது. ஒன்னு சாம்பாருக்காக பருப்பு கடைவதற்கு பயன்படுகிறது. இண்டாவது தயிர் கடைஞ்சு அதிலிருந்து வெண்ணெயை பிரித்தெடுக்க பயன்படுகிறது.
தயிரை கடைந்து வெண்ணெய் பெறுவதற்காக பயன்படுத்தும் மத்துவகைகளில் இரண்டு உள்ளது.
சுவரை ஒட்டி ஒரு சிறிய கொம்பு நட்டிருப்பார்கள் அல்லது வீட்டிலுள்ள மரத்தூண்களில், ஒரு கயிறு கட்டி இருக்கும், தயிர் கடைய “மத்து” இருக்கும். அந்த மத்தின் மையப் பகுதியில் கயிறு சுற்றுவதற்கு ஏற்றவாறு வடிவமைப்பு இருக்கும், நின்றுகொண்டே கடைவதற்கு ஏற்றவாறு 5, 6 அடி நீளமுள்ளதாக இருக்கும். அதிக அளவு தயிரினை கடைவது இம்முறையில். மற்றொன்று உட்கார்ந்து கொண்டு கடைவது போல சிறிய அளவில் இருக்கும். இது குறைவான அளவு தயிரை கடைவதற்கு பயன்படும் என்றார்.திருச்சி பிஷப் ஹீபர் தன்னாட்சிக் கல்லூரி வரலாற்று துறை முதுகலை மாணவர்கள் அபிஷேக், அனு பிரியா, அரிஸ்டோ வசந்தகுமார், திவாகரன், கிஷோர் குமார், கிஷோர், சஞ்ஜய்குமார், லோகேஷ்வரன், உதயகுமார், நரேஷ் பாபு, சித்தார்த் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

    திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *