மோனா…..மோனா…. மோனாலிசா- காவல்துறையில் புதிய வரவு

அரியலூர் மாவட்ட காவல்துறை கொலை,கொள்ளை, போதைப் பொருள், மற்றும் வெடிகுண்டு வைத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காகவும், வைக்கப்படும் இடங்களை மோப்பம் பிடித்து கண்டுபிடிக்கவும் மலர்,பீணா ,ரோஸ் மற்றும் சீமா என 4 துப்பறியும் மோப்ப நாய்கள் உள்ளன. இதில் ரோஸ் என்ற துப்பறியும் காவல்துறை மோப்பநாய் வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெறுகிறது.

இந்நிலையில் 11.11.2024 இன்று லாப்ரடோர் ரெட்ரீவர் வகையைச் சேர்ந்த ஒரு நாய்க்குட்டி அரியலூர் மாவட்ட காவல்துறையில் சேர்க்கப்பட்டது.

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.G.கார்த்திகேயன் I.P.S., அவர்கள் புதிதாக அரியலூர் மாவட்ட காவல்துறையில் சேர்க்கப்பட்ட நாய்க்குட்டிக்கு மோனா என்று பெயர் சூட்டினார்கள். இந்நிகழ்வின் போது திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் திரு.M.மனோகர் I.P.S.,அவர்கள், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.செல்வராஜ் அவர்கள் உடன் இருந்தார்கள் .பின்னார் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் மோனா-வை அரியலூர் மாவட்ட காவல்துறை மோப்ப நாய் பிரிவினர் திரு.செல்வகுமார் (தலைமை காவலர்) அவர்களிடம் வழங்கினார்கள்.

மேலும் மோனா என்ற புதிய நாய்க்குட்டி 6 மாத கால அடிப்படை பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படும். பயிற்சிக்கு பின்னர் மீண்டும் அரியலூர் மாவட்ட காவல்துறை மோப்ப நாய் பிரிவில் பணிபுரிய தொடங்கும்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் அதிரடி மாற்றம் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் நகர காவல் நிலைய ஆய்வாளராக கடந்த 12 மாதங்களாக பணியில் இருந்தவர் திருவானந்தம் அவர்கள். இவர் ஏற்கனவே பொன்மலை மற்றும் அரியமங்கலம் காவல் நிலையங்களில் ஆய்வாளராக பணிபுரிந்து அந்தப் பகுதி மக்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக திகழ்ந்தவர்.…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *