கஞ்சா கடத்திய நால்வருக்கு 12 ஆண்டு சிறைவாசம்

கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 நபர்களுக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ.1,00,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

🐠திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023 ம் ஆண்டு காரில் 72 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட திண்டுக்கல் நகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (48), சுரேஷ் (41), சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த யோகராஜ் (24), அஜித்குமார் (26) ஆகிய நான்கு நபர்களை நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு மதுரை முதலாம் கூடுதல் சிறப்பு போதை பொருட்கள் மனமயக்கும் பொருட்கள் மற்றும் தடுப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சிபின், இ.கா.ப அவர்கள், நீதிமன்ற தலைமை காவலர் தமிழ்ச்செல்வி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் விஜய பாண்டியன் அவர்களின் சீரிய முயற்சியால் (14.11.2024) மதுரை போதைப் பொருட்கள் மனமயக்கம் பொருட்கள் மற்றும் தடுப்பு வழக்குகள் நீதிமன்ற நீதிபதி அவர்கள் மேற்கண்ட குற்றவாளிகள் நான்கு நபர்களுக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,00,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் அதிரடி மாற்றம் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் நகர காவல் நிலைய ஆய்வாளராக கடந்த 12 மாதங்களாக பணியில் இருந்தவர் திருவானந்தம் அவர்கள். இவர் ஏற்கனவே பொன்மலை மற்றும் அரியமங்கலம் காவல் நிலையங்களில் ஆய்வாளராக பணிபுரிந்து அந்தப் பகுதி மக்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக திகழ்ந்தவர்.…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *