வட்ட சில்லுகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் 57வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு வட்ட சில்லுகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியினை நூலகத்தில் நடத்தியது. திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார் நூலகப் பணியாளர் மீனாட்சி சுந்தரம், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்கள் பாண்டியன் முகமது சுபேர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் வட்ட சில்லுகள் குறித்து பேசுகையில், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சுடுமண் மட்கலனின் உடைந்த ஓடுகள் கொண்டு வட்டமாக தட்டையான வடிவில் காணப்படுவது வட்டசில்லுகள் என்பர். வட்டச் சில்லுகள் பல அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. அவற்றில் சில அலங்காரம் செய்த நிலையிலும் கிடைத்துள்ளது. வட்டசில்லுகள் அக்கால மக்களின் சில்லு விளையாட்டு ஆகும் பெரும்பாலும் மகளிர் மட்டுமே விளையாட்டாக கருதி விளையாடியுள்ளனர். வட்டச் சில்லுகள் குறித்து தொல்லியல் நூல்கள் தகவல்களை வழங்குகின்றன எனவே வரலாற்று துறை மாணவர்கள் வரலாற்றை அறிந்து கொள்ள பல நூல்களை கற்றறிய வேண்டும் என்றார். என்றார்.பிஷப் ஹீபர் தன்னாட்சிக் கல்லூரி வரலாற்று துறை முதுகலை மாணவர்கள் அரிஸ்டோ வசந்தகுமார், திவாகரன், கிஷோர், லோகேஷ்வரன், இசாக். கிஷோர் குமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *