காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தாராபுரம் விவேகம் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறை சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பள்ளியின் தாளாளர் முனைவர் திரு. ஆர். சுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அலங்கியம் காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ் குமார், திருப்பூர் மாவட்ட போக்சோ பிரிவு காவல் ஆய்வாளர்
திரு K. இளங்கோவன், திருப்பூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. மல்லிகா, தாராபுரம் காவல் ஆய்வாளர் திரு. விஜய சாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இன்றைய சூழலில் சமூகத்தில் பெருகிவரும் குற்றங்கள், பெண் மற்றும் ஆண் குழந்தைகளின் பாதுகாப்பு, குற்றங்களில் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய அடிப்படைப் புரிதல்களைச் சமூகத்தில் நடக்கும் குற்றச் செயல்களோடு உதாரணம் காட்டி மாணவர்களிடையே எடுத்துரைத்தனர்.

மேலும் போதைப்பொருள் பயன்பாடு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் பற்றித் தெரிய வந்தால் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க மாணவர்கள் தைரியமாக முன்வர வேண்டும் என்று கூறி அறிவுறுத்தினா். அத்துடன் காவல்துறையின் சார்பில் சைபர் குற்றப் புகார்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண் அடங்கிய துண்டறிக்கை அனைவருக்கும் வழங்கப்பட்டது. இறுதியாக விவேகம் பள்ளியின் செயலாளர் முனைவர் திரு.K பூபதி அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை, உதவித் தலைமை ஆசிரியை இருபால் ஆசிரியப் பெருமக்கள், விடுதி பொறுப்பாளர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் அதிரடி மாற்றம் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் நகர காவல் நிலைய ஆய்வாளராக கடந்த 12 மாதங்களாக பணியில் இருந்தவர் திருவானந்தம் அவர்கள். இவர் ஏற்கனவே பொன்மலை மற்றும் அரியமங்கலம் காவல் நிலையங்களில் ஆய்வாளராக பணிபுரிந்து அந்தப் பகுதி மக்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக திகழ்ந்தவர்.…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *