அமமுக போராட்டம்- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாய் இருக்கும் உறையூர் பகுதி, சீனிவாச நகரில் இயங்கி வரும் மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி
கடந்த மாதம் 8ம் தேதி திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார் தலைமையில்,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ப. செந்தில்நாதன் முன்னிலையில்,
திருச்சி சீனிவாச நகர்  மற்றும் லிங்க நகரில் ( மனமகிழ் மன்றம் ) இயங்கி வரும் மதுபான கடைகளை மூடக்கோரி நடைபெற்ற உண்ணாவிரதம் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

இதனை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் அன்று கைது செய்யப்பட்டனர்.

திருச்சியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதால் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மதுரை உயர் நீதிமன்றத்தில் உறையூர் குறத்தெருவில் முறைப்படி உண்ணாவிரதம் இருக்க வழக்கு தொடர்ந்து இருந்தார். இதன் வழக்கு தீர்ப்பு தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்து வந்துள்ளது .

எனவே வரும் டிசம்பர் இரண்டாம் தேதி திங்கட்கிழமை அன்று உறையூர் குறத்தெருவில் திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் உறையூர் சீனிவாசா நகரில் உள்ள டாஸ்மாக் பார் மற்றும் லிங்கநகர் மனமகிழ் மன்றத்தை மூடக்கூறி மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள உள்ளனர் என
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார் .

டாஸ்மாக் மற்றும் மனமகிழ் மன்றத்தை மூட கோரி திருச்சி அமமுகவினருக்கு சாதகமாக வந்துள்ள உயர் நீதிமன்ற தீர்ப்பே முதல் வெற்றி ஆகும் .

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    செய்தியாளர்கள் மீதான கொலைவெறி தாக்குதல் – வல்லூறு ஆசிரியர் சமூக ஆர்வலர் முனைவர் மோகன்ராம் கண்டனம்

    வல்லூறு பத்திரிகை குழுமம் வன்மையாக கண்டிக்கிறது ✍️✍️…தமிழக அரசே பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கொடு….விதிமீறல் குவாரியை படம் பிடிக்க சென்ற திருச்சி நியுஸ் தமிழ் 24×7 பத்திரிகையாளரை தாக்க 50 பேருடன் வந்து ஸ்ரீரங்கம் தொகுதிதிமுக MLA பழனியாண்டி …. கரூரில் கனிம…

    துரை வைகோவின் தொடர் முயற்சியின் அடுத்த நகர்வாக, அவருடைய ஒருங்கிணைப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி மண்டல திட்ட இயக்குநர் (Project Director, NHAI Trichy), திட்ட ஆலோசகர் (Project Consultant, NHAI) மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM, Trichy) தென்னக ரயில்வே பொது மேலாளர் ஒருங்கிணைப்பு கூட்டம்

    நேற்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) அவர்களை துரை வைகோ MP அவரது அலுவலகத்தில் சந்தித்தை தொடர்ந்து இன்று (30.01.2026) தென்னக ரயில்வே பொது மேலாளர் (General Manager, Southern Railway) அவர்களை அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்தார் துரை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *