அமமுக போராட்டம்- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாய் இருக்கும் உறையூர் பகுதி, சீனிவாச நகரில் இயங்கி வரும் மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி
கடந்த மாதம் 8ம் தேதி திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார் தலைமையில்,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ப. செந்தில்நாதன் முன்னிலையில்,
திருச்சி சீனிவாச நகர்  மற்றும் லிங்க நகரில் ( மனமகிழ் மன்றம் ) இயங்கி வரும் மதுபான கடைகளை மூடக்கோரி நடைபெற்ற உண்ணாவிரதம் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

இதனை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் அன்று கைது செய்யப்பட்டனர்.

திருச்சியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதால் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மதுரை உயர் நீதிமன்றத்தில் உறையூர் குறத்தெருவில் முறைப்படி உண்ணாவிரதம் இருக்க வழக்கு தொடர்ந்து இருந்தார். இதன் வழக்கு தீர்ப்பு தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்து வந்துள்ளது .

எனவே வரும் டிசம்பர் இரண்டாம் தேதி திங்கட்கிழமை அன்று உறையூர் குறத்தெருவில் திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் உறையூர் சீனிவாசா நகரில் உள்ள டாஸ்மாக் பார் மற்றும் லிங்கநகர் மனமகிழ் மன்றத்தை மூடக்கூறி மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள உள்ளனர் என
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார் .

டாஸ்மாக் மற்றும் மனமகிழ் மன்றத்தை மூட கோரி திருச்சி அமமுகவினருக்கு சாதகமாக வந்துள்ள உயர் நீதிமன்ற தீர்ப்பே முதல் வெற்றி ஆகும் .

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    மக்கள் உற்சாக வரவேற்பில் ஸ்ரீரங்கம் அஇஅதிமுக வேட்பாளர் மனோகரன்

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் திரு ஆர் மனோகரன் அவர்கள் இன்று காலை 8 மணி முதல் மணப்பாறை வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட அழகியரெட்டிபட்டி சித்தானந்தம் கரிச்சான்பட்டி தாதம்பட்டி டிஎன்பிஎல் குடியிருப்பு குப்பனார்பட்டி குப்பனார் பட்டி…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *