உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்!

தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்: 9715328420

மூலனூர்:உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் வெள்ளகோவில் ஒன்றியம் மூத்த நாயக்கன் வலசு முதல் தாராபுரம் வட்டம் மூலனூர் ஒன்றியம் தூரம்பாடி வரை டாடா நிறுவனம் விவசாயிகள் விலை நிலத்தில் விவசாயிகளின் அனுமதியின்றி உயர் மின் கோபுரம் அமைத்து வருகிறது.

இதனை கண்டித்து வேலப்பநாயக்கன் வலசு, எரசனம் பாளையம், கருப்பன்வலசு, தூரம்பாடி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் கருப்பு கொடி ஏந்தி உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக எரசனம் பாளையம் கிராமத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயி. செங்கோடன் கூறியதாவது:-

உயர் மின் அழுத்த கோபுரத்தினால் தங்களது விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் மேலும் டாடா நிறுவனம் கே எஸ் என்ற துணை நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது .மூலனூர்,
வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து அதில் மின்சார கம்பங்களை அமைத்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள 46 பனை மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். விவசாயிகளிடம் எந்தவித அனுமதியும் கேட்பதில்லை .அதனால் நிறுவனத்தின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் .இது போன்ற நிறுவனங்களுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் அனுமதி வழங்கக் கூடாது. மேலும் விவசாயிகளின் விலை நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பு என்ன என்பதை எந்த நிறுவனமும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. நிறுவனங்களே ஒரு குறிப்பிட்ட தொகையை விவசாயிகளுக்கு தருவதாக கூறி வருகின்றனர். இதனால் எங்களுக்கு எங்கள் கிராமங்களில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் ,உயர்மின் கோபுரங்கள் அமைத்தால் ஆடு, மாடு சினை பிடிக்காது மற்றும் நிலத்தடி நீர் குறைந்து விடும் நிலத்தின் மதிப்பு குறைந்து விடும் . எனவே டாட்டா நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான கேஎஸ் நிறுவனம் அமைத்து வரும் உயர்மின் கோபுர திட்டத்தை கைவிட வேண்டும். அவ்வாறு உயர்மின் கோபுரங்களை அமைக்கும் பட்சத்தில் விவசாயிகள் நீர்நிலைகளை காப்பாற்றுவதற்காக எங்களது உயிர்களையும் இழக்க தயாராக உள்ளோம். மேலும் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் 1000 விவசாயிகள் ஒன்று திரண்டு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ளோம் .
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

பேட்டி: திரு,செங்கோடன் கருப்பன் வலசு.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தமிழக கவர்னர் RN. ரவி திருவானைக்காவல் ஸ்ரீரங்கம் கோவில்களில் சுவாமி தரிசனம்.

    ஸ்ரீரங்கம் ஜன 29 தமிழக கவர்னர் ஆர் என் ரவி நேற்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக காலை 10:15 மணியளவில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வந்தடைந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள்…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *