தொட்டியம் ஸ்ரீ மதுரகாளியம்மன் குடமுழக்கு முகூர்த்த கால் நடும் விழா

2025 -பிப்ரவரி 2 – ஆம் தேதி தொட்டியம் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா எம்எல்ஏ தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது
தொட்டியம், டிச.16-
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சக்தி தலங்களில் சிறந்து விளங்கும் தமிழகத்தில் உள்ள காளி கோயில்களில் மிகவும் பழமை வாய்ந்த தொட்டியம் மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகின்ற 2025 -பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு யாகசாலை முகூர்த்தக்கால் நடும் விழா முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந. தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவரும் தொட்டியம் நகர திமுக செயலாளருமான எம்.ஏ. ஆர்.விஜய்ஆனந்த், தொட்டியம் பேரூராட்சி தலைவர் சரண்யாபிரபு, கோயில் செயல் அலுவலர் வைரவன், ஆய்வாளர் கா.கோ. மலர்விழி, அறங்காவலர் பாஸ்கர், மதிவாணன், ரேவதி, பாமா, மற்றும் தொட்டியம் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு முகூர்த்தக்கால் நட்டனர்.மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 6- லட்சம் செலவில் கோயில் சுற்றுச்சுவரை சுற்றி ஃபேவர் பிளாக் சாலை அமைக்க எம்எல்ஏ தியாகராஜர் தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டது. இந்த முகூர்த்தக்கால் நடும் விழா மற்றும் பூமி பூஜையை முன்னிட்டு மதுரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பக்தர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

நியூ திருச்சி டைம்ஸ் முசிறி செய்தியாளர் தொட்டியம் செல்வகுமார்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *