கொட்டும் பனியில் சிவனடியார்களையும் சிறு குழந்தைகளையும் வீதியில் நிற்க வைத்த செயல் அலுவலரின் ஆணவம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பராய்த்துறை சிவன் கோவில் பாடல் பெற்ற ஸ்தலம்.

இந்த திருக்கோவிலில் சிவனடியார்கள் பொதுமக்கள் பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத பிறப்பின் பொழுது தினமும் அதிகாலையில் சிவனைத் தொழுது தேவார திருவாசக பதிகங்களையும் திருப்பள்ளி எழுச்சி பாடலையும் பாடி மனம் உருகி பிரார்த்தனை செய்வது வழக்கம்.

அதன் தொடர்ச்சியாக சிவனடியார்களையும் குழந்தைகளையும் மரியாதை செய்யும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சிவனடியார்களுக்கும் குழந்தைகளுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்துவது அந்த கிராமத்து மக்களின் இயல்பு.

இது கடந்த 40 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஆனால் இப்பொழுது திருப்பராய்த்துறை சிவன் கோவிலின் செயல் அலுவலராக பணியில் இருக்கும் திருமதி ரோகிணி என்கின்ற அதிகாரி இந்த செயல்முறையை கோவில் வளாகத்தில் உள்ளே நந்தியின் முன்பு செய்யக்கூடாது என திடீரென உத்தரவு பிறப்பித்த காரணத்தினால் இன்று அதிகாலை மார்கழி மாத பிறப்பின் பொழுது கோவிலுக்கு தரிசனம் செய்த வந்த சிவனடியார்களும் குழந்தைகளும் வீதியில் நிற்கவைக்கப்பட்ட கொடுமை அரங்கேறியது.

் கோவிலுக்குள் வந்து பதிகம் பாடக்கூடாது எனவும் அவர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுக்கக்கூடாது எனவும் செயல் அலுவலர் நிர்பந்தித்த காரணத்தினால் கொட்டும் பனியில் குழந்தைகளும் வயதானவர்களும் சிவனடியார்களும் வீதியில் நிற்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு தெருவில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

எல்லோருக்குமான ஆட்சி தருவதாக உத்தரவாதம் அளித்து அதை செயல்முறைப்படுத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக செயல்படும் இவரை போன்ற அதிகாரிகளால் தான் தமிழ்நாடு அரசின் மீது மக்களுக்கு ஒரு விதமான வெறுப்பு ஏற்படும் சூழல் உருவாகின்றது. இந்த பிரச்சனைக்கு காரணமான செயல் அதிகாரி மீது இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் அமைச்சர் சேகர் பாபு அவர்களும் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

குறிப்பு :

இந்த செயல் அதிகாரிக்கும் திருப்பராய்த்துறை கிராமத்தை சேர்ந்த நந்தவனம் மக்களுக்கும் இடையில் நீண்ட நாட்களாகவே கருத்து வேறுபாடு உள்ளது. அந்த கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டிய மின்சாரம் குடிநீர் ஆகியவற்றை இந்த செயல் அதிகாரி தான் வழங்கப்பட விடாமல் தடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. ஆகவே இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் இந்து அறநிலைத்துறை அமைச்சர் அவர்களும் உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கையாகவும் உள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு! பயணிகள் அலறல்.. பஸ் உரிமையாளர்கள் மிரட்டல்.. போக்குவரத்து துறை தூங்குவது ஏன்? “பச்சக்கிளி முத்துச்சாரம்.. பார்க்காத பூமி ஏதம்!” ஆனால், திருச்சியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *