கும்பகோணம் அருகே பாபநாசம் பகுதிகளில் தொடர் கனமழையால் 500-ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் முழுவதும் அழுகிய நிலையில் சாய்ந்து சேதம் அடைந்ததுள்ளது விவசாயிகள் வேதனை ….

கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

கும்பகோணம் அருகே பாபநாசம் பகுதிகளில் தொடர் கனமழையால் 500-ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் முழுவதும் அழுகிய நிலையில் சாய்ந்து சேதம் அடைந்ததுள்ளது விவசாயிகள் வேதனை ….
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள நாயக்கர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500-ஏக்கரில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழையினால் நாயக்கர்ப்பேட்டை பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் முழுவதும் சாய்ந்து , அழுகிய நிலையில் சேதமடைந்து உள்ளாகவும், தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டு தர கோரியும் ,சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுவரை பார்வையிட வரவில்லை என வாழை சாகுபடி விவசாயிகள் மிகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட வாழை சாகுபடி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    தமிழக கவர்னர் RN. ரவி திருவானைக்காவல் ஸ்ரீரங்கம் கோவில்களில் சுவாமி தரிசனம்.

    ஸ்ரீரங்கம் ஜன 29 தமிழக கவர்னர் ஆர் என் ரவி நேற்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக காலை 10:15 மணியளவில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வந்தடைந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *