கும்பகோணம் அருகே பாபநாசம் பகுதிகளில் தொடர் கனமழையால் 500-ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் முழுவதும் அழுகிய நிலையில் சாய்ந்து சேதம் அடைந்ததுள்ளது விவசாயிகள் வேதனை ….

கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

கும்பகோணம் அருகே பாபநாசம் பகுதிகளில் தொடர் கனமழையால் 500-ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் முழுவதும் அழுகிய நிலையில் சாய்ந்து சேதம் அடைந்ததுள்ளது விவசாயிகள் வேதனை ….
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள நாயக்கர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500-ஏக்கரில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழையினால் நாயக்கர்ப்பேட்டை பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் முழுவதும் சாய்ந்து , அழுகிய நிலையில் சேதமடைந்து உள்ளாகவும், தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டு தர கோரியும் ,சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுவரை பார்வையிட வரவில்லை என வாழை சாகுபடி விவசாயிகள் மிகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட வாழை சாகுபடி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தமிழக கவர்னர் RN. ரவி திருவானைக்காவல் ஸ்ரீரங்கம் கோவில்களில் சுவாமி தரிசனம்.

    ஸ்ரீரங்கம் ஜன 29 தமிழக கவர்னர் ஆர் என் ரவி நேற்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக காலை 10:15 மணியளவில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வந்தடைந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள்…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *