
இன்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்தார்.
முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை உலகமே பின்பற்றி வரும் நிலையில், மாநில திட்டக் குழு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால் பள்ளிகளுக்கு குழந்தைகள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளது என்றும், 90 சதவிகிதத்திற்கும் மேலான குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரித்துள்ளது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சீரிய திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக நினைவு பரிசு வழங்கி, நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
