அபாயகரமான ஆற்றுப்பாலம். சரி செய்ய போராடும் சமூக ஆர்வலர்கள் – முதல்வர் முதல் அதிகாரிகள் வரை மனு சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

காணும் மிகவும் ஆபத்தான பாலத்தை கடந்து தான் திருப்பராய்த்துறையில் காவிரி ஆற்றுக்கு செல்ல வேண்டும்.

நீங்க பார்க்கிற இந்த பாலம் திருப்பராய்த்துறையில் இருக்கு இந்த பாலத்தில் சைடுல தடுப்பு சுவர் கிடையாது. ஏன்னு தெரியல யாருக்கும் தெரியல இது யாரு கண்ணுக்கும் தெரியல, யாருமே சரி பண்ண மாட்டேங்கறாங்க. BDO கிட்ட கேட்டா அது எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்கிறார்கள். யாராவது முடிஞ்சவங்க சரி பண்ணி கொடுத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்

இந்த பாலத்தில் கைப்பிடி சுவர்கள் இல்லை. அவைகள் உடைந்து கிட்டத்தட்ட அஞ்சு ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. தினமும் அந்த இடத்தில் காவிரி ஆற்றிற்கு குளிக்க செல்லும் மக்களுக்கும் பாதுகாப்பாற்றதாகும்.

இந்த பாடத்தின் அடியில் கம்பிகள் உடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து விடும் நிலையில் உள்ளது. அந்தப் பாலம் எந்த ஒரு பராமரிப்பும் இன்றி உள்ளது, பாலத்தின் கட்டிடத்தை ஊடுருவி மரங்கள் வளர்ந்துள்ளன மற்றும் பாலத்தை தாங்கும் தூண்களும் பாதிப்படைந்துள்ளன. பல இடங்களில் கட்டிடத்தின் கான்கிரீட்டில் உள்ளே உள்ள கம்பிகள் தெரிகின்றன அந்த கம்பிகள் எல்லாம் துருப்பிடித்து உள்ளன. இந்த பாலம் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விடலாம்.

இந்தப் பாலத்தை கடந்து மக்கள் காவிரி ஆற்றுக்கு செல்கின்றனர் இது ஒரு திருமஞ்சன துறையாகும் இந்தத் துறையில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குளித்து செல்கின்றனர்.

ஒருவேளை தங்களால் இந்த பாலத்தை சரி செய்ய காலதாமதம் ஆகும் என்றால் தயவு செய்து தற்காலிக நடவடிக்கையாக இந்தப் பாலத்தில் இருபுறமும் குச்சி அல்லது கம்பிகளை கொண்டு பாதுகாப்பு அரன்களை ஏற்படுத்தி தரவும்

பத்து நாட்களுக்கு முன்னால் இந்த இடத்தில் ஒருவர் இருசக்கர வாகனத்துடன் இந்த ஆற்றில் விழுந்துவிட்டார், நாம் காலதாமதம் செய்யும் ஒவ்வொரு நிமிடமும் இது மக்களுக்கு ஆபத்தை கூட்டிக்கொண்டே செல்லும் என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்

தயவு செய்து இது தங்களின் மேலான கவனத்திற்கு உரிய நடவடிக்கைக்கும் பணிவுடன் சமர்ப்பிக்கப்படுகிறது.

இதுல ரொம்ப வருத்தமான விஷயம் என்னன்னா வருஷா வருஷம் இங்க திருச்சி மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சிவனடியார்களுக்கு மிக முக்கியமான முதல் முழுக்கு ஐப்பசி 1ஆம் தேதி நடக்குது அதுல கிட்டத்தட்ட ஒரு 5000 பேராவது கலந்து கொள்கிறார்கள் அதுக்கப்புறம் கூட யாருமே கண்டுக்கல உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊராட்சி பிரதிநிதிகள் என்ன பண்றாங்கன்னு தெரியல

Regards,
Warrant Officer K Thangaraj (Retd)
Indian Air Force

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *