அபாயகரமான ஆற்றுப்பாலம். சரி செய்ய போராடும் சமூக ஆர்வலர்கள் – முதல்வர் முதல் அதிகாரிகள் வரை மனு சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

காணும் மிகவும் ஆபத்தான பாலத்தை கடந்து தான் திருப்பராய்த்துறையில் காவிரி ஆற்றுக்கு செல்ல வேண்டும்.

நீங்க பார்க்கிற இந்த பாலம் திருப்பராய்த்துறையில் இருக்கு இந்த பாலத்தில் சைடுல தடுப்பு சுவர் கிடையாது. ஏன்னு தெரியல யாருக்கும் தெரியல இது யாரு கண்ணுக்கும் தெரியல, யாருமே சரி பண்ண மாட்டேங்கறாங்க. BDO கிட்ட கேட்டா அது எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்கிறார்கள். யாராவது முடிஞ்சவங்க சரி பண்ணி கொடுத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்

இந்த பாலத்தில் கைப்பிடி சுவர்கள் இல்லை. அவைகள் உடைந்து கிட்டத்தட்ட அஞ்சு ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. தினமும் அந்த இடத்தில் காவிரி ஆற்றிற்கு குளிக்க செல்லும் மக்களுக்கும் பாதுகாப்பாற்றதாகும்.

இந்த பாடத்தின் அடியில் கம்பிகள் உடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து விடும் நிலையில் உள்ளது. அந்தப் பாலம் எந்த ஒரு பராமரிப்பும் இன்றி உள்ளது, பாலத்தின் கட்டிடத்தை ஊடுருவி மரங்கள் வளர்ந்துள்ளன மற்றும் பாலத்தை தாங்கும் தூண்களும் பாதிப்படைந்துள்ளன. பல இடங்களில் கட்டிடத்தின் கான்கிரீட்டில் உள்ளே உள்ள கம்பிகள் தெரிகின்றன அந்த கம்பிகள் எல்லாம் துருப்பிடித்து உள்ளன. இந்த பாலம் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விடலாம்.

இந்தப் பாலத்தை கடந்து மக்கள் காவிரி ஆற்றுக்கு செல்கின்றனர் இது ஒரு திருமஞ்சன துறையாகும் இந்தத் துறையில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குளித்து செல்கின்றனர்.

ஒருவேளை தங்களால் இந்த பாலத்தை சரி செய்ய காலதாமதம் ஆகும் என்றால் தயவு செய்து தற்காலிக நடவடிக்கையாக இந்தப் பாலத்தில் இருபுறமும் குச்சி அல்லது கம்பிகளை கொண்டு பாதுகாப்பு அரன்களை ஏற்படுத்தி தரவும்

பத்து நாட்களுக்கு முன்னால் இந்த இடத்தில் ஒருவர் இருசக்கர வாகனத்துடன் இந்த ஆற்றில் விழுந்துவிட்டார், நாம் காலதாமதம் செய்யும் ஒவ்வொரு நிமிடமும் இது மக்களுக்கு ஆபத்தை கூட்டிக்கொண்டே செல்லும் என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்

தயவு செய்து இது தங்களின் மேலான கவனத்திற்கு உரிய நடவடிக்கைக்கும் பணிவுடன் சமர்ப்பிக்கப்படுகிறது.

இதுல ரொம்ப வருத்தமான விஷயம் என்னன்னா வருஷா வருஷம் இங்க திருச்சி மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சிவனடியார்களுக்கு மிக முக்கியமான முதல் முழுக்கு ஐப்பசி 1ஆம் தேதி நடக்குது அதுல கிட்டத்தட்ட ஒரு 5000 பேராவது கலந்து கொள்கிறார்கள் அதுக்கப்புறம் கூட யாருமே கண்டுக்கல உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊராட்சி பிரதிநிதிகள் என்ன பண்றாங்கன்னு தெரியல

Regards,
Warrant Officer K Thangaraj (Retd)
Indian Air Force

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    மாடுபிடி வீரர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் சொல்வது எப்படி சாத்தியமாகும்- ஜல்லிக்கட்டு ராஜேஷ்

    திருச்சி, ஜன.24  பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களுக்கு கட்டாயமாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் – தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளர் திருச்சியில் பேட்டி இன்று காலை தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர்ஜல்லிக்கட்டு ராஜேஷ் செய்தியாளர்களுக்கு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *