மேட்டூரில் கைவரிசை காட்டிய வடமாநில கும்பல்..!! அடுத்தடுத்து 12 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் அபேஸ்..!!


மேட்டூர் அனல்மின் நிலைய குடியிருப்புகளில் 12 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தொட்டிப் பட்டியில் மேட்டூர் அனல்மின் நிலைய குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு ஏராளமான பணியாளர்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த செவ்வாய்க் கிழமை இரவு குடியிருப்புக்குள் நுழைந்த மர்ம கும்பல் அடுத்தடுத்த 12 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது, மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உதவி பொறியாளராக பணிபுரியும் மோகனா என்பவர் வீட்டில் ஆறரை பவுன் தங்கம், இதேபோல் நோபீஸ்வரன் என்பவர் வீட்டில் ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் கோபாலாகிருஷ்ணன் என்பவர் வீட்டில் 11 சவரன் தங்க நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. சம்பவம் குறித்த புகாரையடுத்து, மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் மற்றும் கருமலைக்கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் அதிரடி மாற்றம் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் நகர காவல் நிலைய ஆய்வாளராக கடந்த 12 மாதங்களாக பணியில் இருந்தவர் திருவானந்தம் அவர்கள். இவர் ஏற்கனவே பொன்மலை மற்றும் அரியமங்கலம் காவல் நிலையங்களில் ஆய்வாளராக பணிபுரிந்து அந்தப் பகுதி மக்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக திகழ்ந்தவர்.…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *