மேட்டூரில் கைவரிசை காட்டிய வடமாநில கும்பல்..!! அடுத்தடுத்து 12 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் அபேஸ்..!!


மேட்டூர் அனல்மின் நிலைய குடியிருப்புகளில் 12 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தொட்டிப் பட்டியில் மேட்டூர் அனல்மின் நிலைய குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு ஏராளமான பணியாளர்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த செவ்வாய்க் கிழமை இரவு குடியிருப்புக்குள் நுழைந்த மர்ம கும்பல் அடுத்தடுத்த 12 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது, மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உதவி பொறியாளராக பணிபுரியும் மோகனா என்பவர் வீட்டில் ஆறரை பவுன் தங்கம், இதேபோல் நோபீஸ்வரன் என்பவர் வீட்டில் ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் கோபாலாகிருஷ்ணன் என்பவர் வீட்டில் 11 சவரன் தங்க நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. சம்பவம் குறித்த புகாரையடுத்து, மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் மற்றும் கருமலைக்கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருப்பராய்த்துறை சிவன் கோயில் செயல் அலுவலர் பிரபாகரனைக் கண்டு கொலை நடுங்கும் ராமகிருஷ்ண தபோவன சுவாமிகள். காரணம் என்ன? அதிர்ச்சி ரிப்போர்ட். ராமகிருஷ்ண தபோவன ஃபைல்ஸ் 1/22 , உபயம்:RTI

    திருவாசகம்:”நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!” திருப்பராய்த்துறை திருக்கோயிலில் பல ஆண்டுகளாக திட்டமிட்டு பதுக்கப்பட்டிருந்த, அமைதியாக கிடந்த கோப்புகள், ஒரு அதிகாரியின் வருகையால் உயிர் பெற்றதாகக் கூறப்படுகிறது. செயல் அலுவலர் பிரபாகரன் பொறுப்பேற்ற…

    சாமியார்களா குண்டர்களா? ஆசிரியர்களா கூலிப்படையா?நேர்மையான மக்களின் மனம் கவர்ந்த TVK ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்க சதியா!

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை கிராமத்தில் உள்ள சிவன் கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கூலிப் படைகளால், குண்டர்களால் திறக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் காலையில் கல்லான சிவபெருமான் முன்னே, பள்ளி குழந்தைகள் முன்னே, பெற்றோர்கள் முன்னே, பொதுமக்கள் முன்னே, சிவன்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *