இடிந்து விழும்நிலையில் இடுகாடு காத்திருப்போர் மண்டபம் – விளக்கமளித்த ஊராட்சி மன்ற தலைவர்

இன்று திருப்பராய்த்துறையில் இடுகாடு செல்லும் பாதையில் சாய்ந்த ஆலமரத்தின் பாகங்கள் அகற்றப்படாமலும் காத்திருப்போர் மண்டபம் இடியும் அபாயத்தில் உள்ளதாகவும் செய்தி வெளியிட்டிருந்தோம்.

மாலையில் நம் அலுவலகத்தை தொடர்பு கொண்ட ஊராட்சி மன்றத்தலைவர் திரு.பிரகாசமூர்த்தி அந்த தகவல் தவறானதென்றும் மண்டபம் நல்ல நிலையில் உள்ளதாகவும் விளக்கமளித்து அது தொடர்பான படங்களையும் பகிர்ந்தார்.

அதன் விபரம் கீழே……..

இடிந்து விழும் நிலையில் காத்திருப்போர் கூடம் உள்ளதாக வந்த தகவல் தவறானது. பெரிய மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒரு ஓரத்தில் சேதமடைந்தது உண்மை. ஆனால் கட்டிடம் பெரியளவில் சேதமடையவில்லை. யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் இல்லை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

TNB.பிரகாசமூர்த்தி

ஊராட்சி மன்ற தலைவர்
திருப்பராய்த்துறை

மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு பெறுவதற்காக சம்மந்தப்பட்ட துறை/அதிகாரிகளை நாடி அவற்றை தீர்த்து வைப்பதே ஊடக தர்மம். அதனடிப்படையில் வெளியிடப்பட்ட செய்திக்கு உரிய விளக்கம் கிடைத்துள்ளதால் மேற்கண்ட செய்தியை நாம் விளக்கிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

என்றென்றும் சாமானிய மக்களின் மனசாட்சியாக உண்மை நிகழ்வுகளை மக்கள்மன்றத்தில் சமர்பிப்பதே நமது நியூ திருச்சி டைம்ஸ் ன் உயரிய நோக்கமாகும்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *