இடிந்து விழும்நிலையில் இடுகாடு காத்திருப்போர் மண்டபம் – விளக்கமளித்த ஊராட்சி மன்ற தலைவர்

இன்று திருப்பராய்த்துறையில் இடுகாடு செல்லும் பாதையில் சாய்ந்த ஆலமரத்தின் பாகங்கள் அகற்றப்படாமலும் காத்திருப்போர் மண்டபம் இடியும் அபாயத்தில் உள்ளதாகவும் செய்தி வெளியிட்டிருந்தோம்.

மாலையில் நம் அலுவலகத்தை தொடர்பு கொண்ட ஊராட்சி மன்றத்தலைவர் திரு.பிரகாசமூர்த்தி அந்த தகவல் தவறானதென்றும் மண்டபம் நல்ல நிலையில் உள்ளதாகவும் விளக்கமளித்து அது தொடர்பான படங்களையும் பகிர்ந்தார்.

அதன் விபரம் கீழே……..

இடிந்து விழும் நிலையில் காத்திருப்போர் கூடம் உள்ளதாக வந்த தகவல் தவறானது. பெரிய மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒரு ஓரத்தில் சேதமடைந்தது உண்மை. ஆனால் கட்டிடம் பெரியளவில் சேதமடையவில்லை. யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் இல்லை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

TNB.பிரகாசமூர்த்தி

ஊராட்சி மன்ற தலைவர்
திருப்பராய்த்துறை

மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு பெறுவதற்காக சம்மந்தப்பட்ட துறை/அதிகாரிகளை நாடி அவற்றை தீர்த்து வைப்பதே ஊடக தர்மம். அதனடிப்படையில் வெளியிடப்பட்ட செய்திக்கு உரிய விளக்கம் கிடைத்துள்ளதால் மேற்கண்ட செய்தியை நாம் விளக்கிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

என்றென்றும் சாமானிய மக்களின் மனசாட்சியாக உண்மை நிகழ்வுகளை மக்கள்மன்றத்தில் சமர்பிப்பதே நமது நியூ திருச்சி டைம்ஸ் ன் உயரிய நோக்கமாகும்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    செய்தியாளர்கள் மீதான கொலைவெறி தாக்குதல் – வல்லூறு ஆசிரியர் சமூக ஆர்வலர் முனைவர் மோகன்ராம் கண்டனம்

    வல்லூறு பத்திரிகை குழுமம் வன்மையாக கண்டிக்கிறது ✍️✍️…தமிழக அரசே பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கொடு….விதிமீறல் குவாரியை படம் பிடிக்க சென்ற திருச்சி நியுஸ் தமிழ் 24×7 பத்திரிகையாளரை தாக்க 50 பேருடன் வந்து ஸ்ரீரங்கம் தொகுதிதிமுக MLA பழனியாண்டி …. கரூரில் கனிம…

    துரை வைகோவின் தொடர் முயற்சியின் அடுத்த நகர்வாக, அவருடைய ஒருங்கிணைப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி மண்டல திட்ட இயக்குநர் (Project Director, NHAI Trichy), திட்ட ஆலோசகர் (Project Consultant, NHAI) மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM, Trichy) தென்னக ரயில்வே பொது மேலாளர் ஒருங்கிணைப்பு கூட்டம்

    நேற்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) அவர்களை துரை வைகோ MP அவரது அலுவலகத்தில் சந்தித்தை தொடர்ந்து இன்று (30.01.2026) தென்னக ரயில்வே பொது மேலாளர் (General Manager, Southern Railway) அவர்களை அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்தார் துரை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *