முதல்வர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்

234/234


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதியில் 234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ் 234ஆவது தொகுதியாக ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

கொளத்தூர் தொகுதி ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில்
குழந்தைகள் தினமான இன்று விரிவான ஆய்வு மேற்கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் ரோபோடிக்ஸ் கருவிகளை தயாரித்துள்ள மாணவர்களை சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார். தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவை மாணவர்களுக்கு பரிமாறி, பள்ளியின் உட்கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். பள்ளியின் கழிப்பறை வசதிகளை பார்வையிட்டு ஆசிரிய பெருமக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களும், வணக்கத்திற்குரிய மேயர் திரு.பிரியாராஜன் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரடியாக சென்று பள்ளி கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் உருவான நலத்திட்டப்பணிகளை துவக்கி வைத்த துரை வைகோ எம்.பி

    மக்களின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கும் வளர்ச்சித் திட்டங்கள் மட்டுமல்ல, அவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் இதுபோன்ற மக்கள் நலப் பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், மக்கள் பணிக்கான அரசியலின் உண்மையான வெற்றியாக நான் கருதுகிறேன். அதன்படி, இன்று (12.06.2026)…

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *