முதல்வர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்

234/234


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதியில் 234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ் 234ஆவது தொகுதியாக ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

கொளத்தூர் தொகுதி ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில்
குழந்தைகள் தினமான இன்று விரிவான ஆய்வு மேற்கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் ரோபோடிக்ஸ் கருவிகளை தயாரித்துள்ள மாணவர்களை சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார். தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவை மாணவர்களுக்கு பரிமாறி, பள்ளியின் உட்கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். பள்ளியின் கழிப்பறை வசதிகளை பார்வையிட்டு ஆசிரிய பெருமக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களும், வணக்கத்திற்குரிய மேயர் திரு.பிரியாராஜன் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரடியாக சென்று பள்ளி கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    சாமியார்களா குண்டர்களா? ஆசிரியர்களா கூலிப்படையா?நேர்மையான மக்களின் மனம் கவர்ந்த TVK ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்க சதியா!

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை கிராமத்தில் உள்ள சிவன் கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கூலிப் படைகளால், குண்டர்களால் திறக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் காலையில் கல்லான சிவபெருமான் முன்னே, பள்ளி குழந்தைகள் முன்னே, பெற்றோர்கள் முன்னே, பொதுமக்கள் முன்னே, சிவன்…

    ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த நூற்றுக்கால் மண்டபத்தை ஆக்கிரமித்த நர்சரி பள்ளி!நெற்குவியலுக்கு நடுவே பிஞ்சுக் குழந்தைகள்: அறநிலையத்துறை அதிகாரியை மிரட்டும் அத்துமீறல்!

    திருப்பராய்த்துறை அறநிலையத்துறைக்கு சொந்தமான , வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயிரம் ஆண்டுகள் பழமையான நூற்றுக்கால் மண்டபத்தை, எவ்வித அரசு அனுமதியும் இன்றி ‘நரேந்திரா வித்யாலயா’ என்ற நர்சரி பள்ளி ஆக்கிரமித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பள்ளி திருப்பராய்த்துறை, ராமகிருஷ்ண தபோவன…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *