திருவெறும்பூர் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளில் சார்பாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது

திருவெறும்பூர் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளில் சார்பாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது

துவாக்குடி: நவ17
தமிழகத்தில் ஆறு மாத குழந்தை மற்றும் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தமிழக முதல்வர் அவர்களின் சிறிய ஏற்பாட்டில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை தறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளின் சார்பாக


நேற்று துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட வடக்கு மலை பகுதியில் புதிதாக அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் சுமார் 150 குழந்தைகளுக்கு அவர்கள் தாய்மார்களின் மூலம் அரசு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது இதில் கடுமையாக எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இரண்டு ஊட்டச்சத்து பெட்டகமும் மீதமுள்ள 94 குழந்தைகளுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் துவாக்குடி நகர் மன்ற தலைவர் காயம்பு, மாவட்ட திட்ட அலுவலர் நித்தியா மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி ,குழந்தை வளர்ச்சி வட்டார அலுவலர் சாய்ராபானு உட்பட ஏராளமானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

    திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *