
பாரதப் பிரதமரின் ரூபாய் 10,00,000 லட்சத்திற்கான விபத்து காப்பீடு திட்டம் ( TATA AIG & Post Office )
திட்டத்தின் குறிக்கோள்
1.ஆபத்து காலத்தின் ஏற்படும் நிதிநிலை சரி செய்வதற்கும் காப்பீடு முக்கியத்துவத்துவம்
குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பிற்காக
தகுதி 18 வயது முதல் 65 வயது உள்ள ஆண் பெண் இருபாலரும் எடுத்துக் கொள்ளலாம்.
வருடத்திற்கு ரூபாய் 399 சந்தாவாக செலுத்த வேண்டும்.
திட்டம் எடுக்கும் முறை
தபால் நிலையத்திற்கு சென்றோ அல்லது உங்கள் பகுதியில் தபால்காரர் வரும்போதோ இத்திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம்.
திட்டம் எடுக்கும் பொழுது ஸ்மார்ட் போன் அவசியம்.
கைவிரல் ரேகை மூலம் திட்டம் உருவாக்கப்படும்.

திட்டத்தின் நன்மைகள்
1.விபத்தினால் ஏற்படும் இறப்புக்கு ரூபாய் 10,00,000 லட்சம்
2.விபத்து மூலம் ஏற்படும் பகுதிநேர முடக்கத்திற்கு ரூபாய் 10,00,000 லட்சம்
3.விபத்தினால் ஏற்படும் முழு உடல் முடக்கத்திற்கு ரூபாய் 10,00,000 லட்சம்
4.பக்கவாதம் ஏற்பட்டால் ரூபாய் 10,00,000 லட்சம்
5.விபத்து மூலம் ஏற்படும் உள் நோயாளி சிகிச்சை பிரிவுகளுக்கு ரூபாய் 60 ஆயிரம் வரை மற்றும் புறநோயாளி நோயாளி பகுதிக்கு ரூபாய் 30 ஆயிரம் வரை காப்பீட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்.
6.விபத்து மரணம் அல்லது பக்கவாதம் ஏதும் ஏற்பட்டால் அவர்களுக்கு குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் படிப்பு செலவுக்காக ரூபாய் 1,00,000 வரை பெற்றுக் கொள்ளலாம் ( இரண்டு குழந்தைகளுக்கு )
7.விபத்துக்குபின் சிகிச்சை பெறும்போது தினமும் ரூபாய் 1,000 வீதம் 9 நாட்களுக்கு பெற்றுக் கொள்ளலாம்.
8.விபத்தினால் ஏற்பட்ட குடும்பத்தினர் வரும் பயண செலவுக்கு ரூபாய் 25,000 வரை பெற்றுக் கொள்ளலாம்.
9.விபத்து மரணம் ஈமச்சடங்குக்காக ரூபாய் 5000 பெற்றுக் கொள்ளலாம்
பாலிசி எடுத்த பிறகு ஏதேனும் எதிர்பாராத சம்பவம் ஏற்பட்டால் அருகில் உள்ள அஞ்சல் துறையை அணுகவும்.
