இலவச கண் சிகிச்சை முகாம்

கணியூரில் துளிர் அறக்கட்டளை சார்பாக கண்சிகிச்சை முகாம்
பொள்ளாச்சி எம்.பி.ஈஸ்வரசாமி துவக்கிவைத்தார்..

மடத்துக்குளம்,நவ 27

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த கணியூரில் துளிர் அறக்கட்டளை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய துளிர் அறக்கட்டளை பொதுக்குழு உறுப்பினர் திருமதி உமையாள் அவர்களின் நினைவாக இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது..

கணியூர் ஓம் முருகா திருமண மண்டபத்தில் நடந்த இந்த கண் சிகிச்சை முகாமிற்கு மடத்துக்குளம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார்கள்.
துளிர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் கணியூர் காவல்நிலைய காவல்துறையினர் முன்னிலை வகித்தனர்.
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி இந்த இலவச கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார்.

கண்புரை, கிட்டபார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட
து,
துளிர் அறக்கட்டளை மற்றும் மலரும் நினைவுகள் நண்பர்கள் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த முகாமில் பயனடைந்தனர்..

தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *