அப்பா…. கட்அவுட் எமனிடம் இருந்து காப்பாற்றுங்கள் – மக்கள் கோரிக்கை

தமிழகம் எங்கிலும் பேனர் கலாச்சாரம் பெருகி நின்றதான் காரணமாக சென்னையில் ஒரு அப்பாவி பெண் பேனர் விழுந்து அதன் காரணமாக லாரி மோதி பலியானார்.

சமூக ஆர்வலரும் போராளியான அமரர் அய்யா traffic ராமசாமி அவர்கள் நீதிமன்றத்தை அணுகி தடை ஆணை பெற்றார்.

அப்போது எதிர் கட்சி தலைவராக இருந்த இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் கட்சியினருக்கு பேனர் வைக்க தடை விதித்து நீதிமன்றத்திலும் உறுதி அளித்தார்.

காலம் மாறியது களம் மாறியது. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது, ஸ்டாலின் முதல்வர் ஆனார். ஆனால் எதிர்கட்சி தலைவராக ஸ்டாலின் தந்த உறுதிமொழியை அவரின் கட்டளையை இப்போது அவரின் உடன்பிறப்புகள் புறக்கணித்து திருச்சி நகர் முழுவதும் பேனர் கலாச்சாரத்தை தொடங்கி வைத்து அது இன்று ஶ்ரீரங்கம் காவல் நிலையம் வரை வந்து விட்டது.

ஆம்…….
ஶ்ரீரங்கம் காவல் நிலையம் எதிரிலேயே ராஜகோபுரம் அருகிலேயே ஆளுயர பேனர்களை வைத்து உடன்பிறப்புகள் தலைவரின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

மீண்டும் ஒரு உயிர் பலியாகவிடாமல் தமிழர்களின் பாசம் மிகு மரியாதைக்குரிய அப்பா அவர்கள் இந்த கட்அவுட் கலாச்சாரத்தை களை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *