தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் மருத்துவக் கல்லூரிக்கு செல்வதற்கான பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி

தஞ்சாவூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில்தஞ்சை மருத்துவக் கல்லூரி செல்வதற்காக நோயாளிகளும் பயணிகளும் மணிக்கணக்கில் காத்திருக்கின்ற நிலை உள்ளது.

காத்திருக்கும் பயணிகளுக்கு பேருந்து நிழற்குடையோ அமர்வதற்கான இருக்கைகளோ எதுவுமே கிடையாது.ஒரு மணி நேரம் ஆனாலும் கால் கடுக்க வெயிலிலும் மழையிலும் அவர்கள் காத்துக் கொண்டு நிற்கும் அவல நிலை தொடர்கின்றது. தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இந்த சூழ்நிலையில் அவர்களை பார்ப்பதற்காக வரும் உறவினர்களோ அல்லது சிகிச்சைக்காக வரும் நோயாளிகளோ புதிய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவக் கல்லூரி செல்ல வேண்டும் என்றால் நீண்ட நேரம் வெயிலிலும் மழையிலும் காத்திருக்கத்தான் வேண்டும்.

புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு நிமிடத்திற்கு ஒரு பேருந்து இருக்கும் சூழலில் மருத்துவக் கல்லூரி செல்வதற்கு எத்தனை மணிக்கு பேருந்து வரும் என்பது அவர்களுக்கும் தெரிவதில்லை அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் தெரிவதில்லை. மொத்தத்திற்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு பேருந்துகளை இயக்கப்படுவதாகவும் அதனால் சரியான நேரம் என்பது யாருக்கும் தெரியாது என்றும் கூறுகிறார்கள் அங்கு இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களும் மாநகராட்சி அதிகாரிகளும் போக்குவரத்து துறை அதிகாரிகளும் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினரும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மருத்துவக் கல்லூரிக்கு கால் வலியுடன் செல்லக்கூடிய பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் தகுந்த உதவிகளை வழங்க வேண்டும் என்பதே கால் வலியோடு காத்திருக்கும் பொது ஜனங்களின் கோரிக்கை ஆகும்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

    திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா கணேசன் கல்லூரி தாளாளர் ராஜசேகரன் தற்போது திருச்சி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்-திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் அரசு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *