மாநகராட்சி மேயர் வீட்டு அருகே ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு நடவடிக்கை எடுப்பாரா ஆணையர்…!!!

திருச்சி மாநகராட்சி, மண்டலம் 4, வார்டு 53-ல் உள்ள கணபதிபுரம் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதை வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது.

இது தொடர்பாக, இளநிலை பொறியாளரிடம் கேட்ட போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணி செய்த ஒப்பந்ததாரரின் அலட்சியத்தின் காரணமாக இரண்டு ஆண்டுகளாக சாலைகள் அமைக்காமல் உள்ளதாகவும், இப்பணி தொடர்பாக மாநகராட்சி ஆணையரின் நேரடி கண்காணிப்பில் இருப்பதால் புகார் தொடர்பாக மாநகராட்சி ஆணையரையே நேரடியாக கேட்டுக் கொள்ளுங்கள் என அலட்சியமாக பதில் தெரிவிப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.

மாநகராட்சி மற்ற பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் மூடப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கணபதிபுரத்தில் சாலை அமைக்காமல் பணி செய்தது போன்று முறைகேடாக அரசு நிதியை கையாடல் செய்யப்பட்டதா என கேள்வி எழுப்பும் பொது மக்கள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *